அமைதி! அமைதி!! .. குண்டுக்கு அயராத புத்தர்
கண்டி:
இலங்கையின் கண்டியில் உள்ள புத்த ஆலயம் ஒன்று வெடிகுண்டுத் தாக்குதலுக்கு தப்பி உள்ளது. இதற்கு காரணம் இக்கோவில் தேன் மற்றும்மூலிகைகளால் கட்டப்பட்டதாகும்.
கண்டியில் புத்தரின் புனிதப்பல் பாதுகாக்கப்படும் தாலாடா மாலிகவா கோவிலின் முதன்மை காப்பாளர் நிரஞ்சன் விஜயரத்னே கூறியதாவது:
1998 ஜனவரி 25ம் தேதி வெடிபொருட்கள் ஏற்றிய டிரக் ஒன்று கோவிலின் நுழைவாயிலில் மோதி வெடித்தது. இதனால் இக்கோவிலின்மேற்கூரை மற்றும் வெளிப்புற சுவர்கள் பாதிக்கப்பட்டன. ஆனால், கோவிலின் உள்பகுதி சேதமடையவில்லை.
கோவில் முழுவதும் மூலிகைகள் மற்றும் தேன் கொண்டு கட்டப்பட்டதால் அதன் சுவர்கள் அதிர்வுகளை தடுக்காமல் அவை கடந்து செல்லும்வகையில் அமைந்துள்ளன. விடுதலைப் புலிகளின் இந்த முயற்சியை அடுத்தே இலங்கை அரசு அவ்வியக்கத்தை தடை செய்தது.
வெடிவிபத்தால் கிடைத்த மற்றொரு பயன் கோவிலின் சுவரில் வரையப்பட்டிருந்த ஜாதகக் கதைகள். புத்தர் காலத்தில் நிலவிய நாட்டுப்புற கதைகளானஇவை சுவற்றில் வரையப்பட்டிருந்தது கோவில் நிர்வாகத்திற்கே தெரியவரமாலிருந்ததற்கு காரணம் இந்தப்படைப்புகளை மறைத்து பிளாஸ்ட்டர்கள்ஒட்டப்பட்டிருந்தது தான்.
யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட வேண்டிய உலக நினைவுச் சின்னங்களில் ஒன்றான இக்கோவிலை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அரசும்எதிர்க்கட்சிகளும் இக்கோவிலை பாதுகாப்பதற்கு வேண்டிய உதவிகளை செய்து வருகின்றன. இதுவரை இக்கோவிலை மறுசீரமைப்பதற்கான நிதிக்கு120 மில்லியன் கிடைத்துள்ளது.
கோவில் மறுசீரமைப்பிற்கு பழங்கால கட்டுமான முறையே பின்பற்றப்படுகிறது. வெளிநாட்டினரை இக்கோவில் மறுசீரமைப்பு கட்டுமானபணிக்குமற்றவர்கள் அழைக்க விரும்பிய போதும் உள்ளூர் மக்களைக் கொண்டே மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.
16ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில் நவீன பாதுகாப்பு வசதிகளுடன் இருப்பதுடன், கோவிலுக்குள் வாகனங்கள் செல்ல தடை போன்ற பலமுன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் பாதுகாக்கப்படுகிறது.
இக்கோவிலின் சிறப்பம்சங்களை காணவரும் பார்வையாளர்கள் இலங்கை அரசின் தேசீய சொத்தாக அறிவிக்கப்பட்ட 50 ஆண்டுகளுக்கு மேல்இக்கோவிலில் இருந்த யானையக் காணத்தவறியதில்லை.
கோவிலின் சிற்பங்களும், ஓவியங்களும் கோவிலில் உள்ள தனி மியூசியத்தில் பாதுகாக்கப்படுகின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications