For Daily Alerts
Just In
உயிர் தப்பிய ஆடு
அஞ்சார் (குஜராத்):
குஜராத்தில், பூகம்ப இடிபாடுகளில் சிக்கிப் பரிதவித்த ஒரு ஆடு பத்திரமாக உயிருடன்மீட்கப்பட்டது.
அஞ்சார் நகரில் இந்த ஆடு இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடி வந்தது. இடிந்துசிதிலமான ஒரு வீட்டிலிருந்து ஆட்டின் குரல் கேட்ட அங்கிருந்த மீட்புப் பணியாளர்கள்மற்றும் கிராமத்தினர் இடிபாடுகளை நீக்கி அங்கிருந்த ஆட்டை மீட்க முயன்றனர்.
2 கான்க்ரீட் பலகைகளுக்கு மத்தியில் அந்த ஆடு பரிதாபமாகச் சிக்கியிருந்தது. நீண்டபோராட்டத்திற்குப் பிறகு ஆடு பத்திரமாக மீட்கப்பட்டது. கால்நடை டாக்டர்கள்அதற்கு சிகிச்சை அளித்தனர். ஆட்டுக்கு எந்தக் காயமும் இல்லை.
இடிபாடுகளில் சிக்கிய அதிரிச்சியிலிருந்து இன்னும் மீளாததால், அந்த ஆடு எதையும்சாப்பிட மறுக்கிறது.
யு.என்.ஐ.
Story first published: Saturday, February 10, 2001, 5:30 [IST]