சென்னைவாசிகள் கடைப்பிடித்த கட்டாய மெளன அஞ்சலி
சென்னை:
அமெரிக்காவில் வர்த்தகக் கட்டிடத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கட்டிடம் தரைமட்டமானதோடுபல்லாயிரக்கணக்கானோர் பலியான சம்பவத்துக்கு, சென்னையில் இன்று சாலைகளில் சென்றவர்கள் கட்டாயமெளன அஞ்சலிக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது முதல்வர் ஜெயலலிதா உட்படஅனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் அஞ்சலி செலுத்தினார்கள்.
அதேபோல சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அலுவலகங்களில் இன்று காலை 10.30 மணியளவில்அஞ்சலி செலுத்தப்பட்டது.
சென்னையில் சாலைகளில் சென்று கொண்டிருந்தவர்களும் அஞ்சலி செலுத்தியது வேடிக்கையாக இருந்தது.
மவுண்ட் ரோடு போன்ற போக்குவரத்துமிகுந்த சாலைகளில், எங்கே சிகப்பு சிக்னல் விழுந்துவிடுமோ என்றஅச்சத்தில் பைக்குகளிலும், கார்களிலும் பறந்துகொண்டிருப்பவர்கள் அதிகம்.
இந்நிலையில் அஞ்சலி செலுத்துவதற்காக 10.30 மணியளவில் அனைத்து சிக்னல்களிலும் போலீசார் கையைக்காட்டிஅனைத்து வாகனங்களையும் கட்டாயப்படுத்தி நிறுத்திவிட்டனர்.
ஒன்றும் புரியாமல் விழித்த சிலருக்கு போலீசார் கைகளில் வைத்திருந்த "அமெரிக்காவில் பலியானோர்க்குஅஞ்சலி" என்ற போர்டை பார்த்த பிறகுதான் எதற்காக நிற்கவைக்கப்பட்டிருக்கிறோம் என்பது புரிந்தது.
அப்படியும் சிலர் தங்களுக்குக் கிடைத்த "கேப்களில்" வண்டிகளை நகர்த்தி முதலில் செல்வதையே குறியாகநினைத்துச் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். கார்களில் வந்த சிலர், வழக்கம்போல சிக்னல் என்று நினைத்து காரில்உட்கார்ந்தபடியே பேப்பர்களைப் புரட்டிக்கொண்டிருந்தார்கள்.
பிறகு ஒருவழியாக 2 நிமிடங்கள் கழிந்ததும் விட்டால்போதும் என்பதைப் போல, தப்பித்தோம் பிழைத்தோம்என்று வண்டிகளில் பறந்தார்கள்.
எப்படியோ மத்திய அரசின் உத்தரவுப்படி 2 நிமிடம் அனைவரையும் போலீசார் நிற்கவைத்துவிட்டனர். ஆனால்அவர்களை மவுனமாக்கவோ, அஞ்சலி செலுத்த வைக்கவோ போலீசாரால் முடியவில்லை.
ஏதோ ஒரு சிலராவது மெளனமாக இருந்தார்களே என்றுதான் நிம்மதி அடைந்து கொள்ளலாம்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications