அமெரிக்காவில் நடந்த தாக்குதலை டிவியில் பார்த்தவர் பலி
பெங்களூர்:
அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை டிவியில் பார்த்தவர் அங்கு வேலை பார்க்கும் தன் மகனும்இறந்திருப்பார் என்று நினைத்து மாரடைப்பால் மரணமடைந்தார்.
கிருஷ்ணையா கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கம்போல டிவி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போதுஅமெரிக்காவில் தீவிரவாதிகள் விமானங்களைக் கடத்தி அவற்றைக்கொண்டு, அந்நாட்டின் வர்த்தகமையக்கட்டிடத்தின் மீது மோதும் காட்சியை டிவியில் பார்த்தார். உடனே அவருக்கு அங்கு வேலை செய்யும் தனதுமகன் ரகுநாத்தின் ஞாபகம்தான் வந்தது.
அந்தத் தாக்குதலில் தனது மகனும் இறந்திருப்பானோ என்று மனம் வருந்திய அவர், தான் வழக்கமாகச் சாப்பிடும்இருதய நோய்க்கான மருந்துகளைச் சாப்பிடாமல் தூங்கச் சென்றுவிட்டார்.
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து அவரது மகன் வீட்டிற்கு போன் செய்து பார்த்திருக்கிறார். ஆனால் லைன்கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது மாமனார் வீட்டிற்கு போன் செய்து தான் அங்கு பாதுகாப்பாகஇருப்பதாகவும், நியூஜெர்சியில் ஒன்றும் பிரச்சனை இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து அவரது மாமனார், தனது மகளைத் தொடர்புகொண்டு, ரகுநாத் போன்செய்ததைப் பற்றித்தெரிவித்திருக்கிறார்.
பிறகு தூங்கிக்கொண்டிருந்த கிருஷ்ணையாவை அவரது மருமகள் எழுப்ப முயன்றிருக்கிறார். ஆனால்முடியவில்லை. பிறகு காலையில் அவர் எழுந்தவுடன் சொல்லிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்.
ஆனால் விடிந்து வெகுநேரமாகியும் கிருஷ்ணையா விழிக்கவில்லை. அவர் படுக்கையிலேயே மகனைநினைத்துக்கொண்டு பரிதாபமாக மரணமடைந்திருக்கிறார்.
இதுகுறித்து அவரது மருமகள் கூறும்போது, எனது மாமனாருக்கு நியூயார்க்குக்கும் நியூஜெர்சிக்கும் வெகுதூரம்என்பது தெரியவில்லை. அவர் இரண்டும் அருகருகே இருக்கிறது என்று தவறாக நினைத்துவிட்டார் என்றார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications