For Daily Alerts
Just In
திமுக கூட்டணியில் இணைவது சந்தேகமே என்கிறார் வைகோ
சென்னை:
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்துப் போட்டியிடப் போவதாக மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
எங்களது கொள்கைகளுக்கு ஒத்து வரும் கட்சிகளை கூட்டணி சேர்த்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர மாட்டோம். இதில் உறுதியாக உள்ளோம். உள்ளாட்சித்தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம்.
எங்களை திமுக கூட்டணியில் சேர்க்க முயலும் பா.ஜ.க.வின் முயற்சியை வரவேற்கிறோம். இருப்பினும் திமுககூட்டணியில் நாங்கள் இணைவது சந்தேகமே என்றார் வைகோ.
Story first published: Wednesday, September 19, 2001, 5:30 [IST]