காங். தலைமையில் அமைகிறது மெகா கூட்டணி
சென்னை:
காங்கிரஸ் கட்சி தலைமையில் உள்ளாட்சித் தேர்தலில் புதிய அணி அமையவுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அதிமுகவுடன்கூட்டணி சரி வராததால் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
அதேபோல, திமுக கூட்டணியில் உடன்பாடு ஏற்படாததால் ப.சிதம்பரத்தின் காங்கிரஸ்ஜனநாயக பேரவையும் தனித்துப்போட்டியிட முடிவு செய்துள்ளது.
தற்போது தனித்துப் போட்டியிடுவதற்குப் பதில் கூட்டணியாக நிற்க காங்கிரஸ்கட்சியும், காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.இதுதொடர்பாக பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. அதில் உடன்பாடுஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரவுள்ளன, முன்னாள் அமைச்சர்கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம், டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம்,ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி ஆகியவையே அவை.
ஆறு மேயர் பதவிகளில் காங்கிரஸ் கட்சி மூன்று மேயர் பதவிக்குப் போட்டியிட முடிவுசெய்துள்ளது. சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் காங்கிரஸ்போட்டியிடலாம்.
ப.சிதம்பரத்தின் கட்சிக்கு திருச்சி, சேலம் ஆகியவை ஒதுக்கப்படலாம். மீதமுள்ளநெல்லை மேயர் தேர்தலில் புதிய தமிழகம் போட்டியிடலாம் என்று தெரிகிறது.
மக்கள் தமிழ் தேசம் மற்றும் புதிய நீதிக் கட்சிக்கு நகராட்சி மற்றும் பிற இடங்களில்போட்டியிட இடம் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், ப.சிதம்பரம், கண்ணப்பன்,ஏ.சி.சண்முகம் மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி அமெரிக்காவில் இருப்பதால் அவரதுபிரதிநிதி ஆகியோருக்கிடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதிமுகவுடன் அதிருப்தியில்இருப்பதாகத் தெரிகிறது. அவர்களையும் தங்களது கூட்டணிக்கு இழுக்க காங்கிரஸ்தரப்பு முயற்சி செய்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காங்கிரஸ் இல்லாத நிலையில் தங்களுக்கு அதிகஇடங்கள் ஒதுக்குமாறு அதிமுகவிடம் கோரியுள்ளனர். மேலும், மதுரை மேயர்தேர்தலில் தங்களுக்கு வாய்ப்பு தருமாறும் கோரியுள்ளனர்.
ஆனால் அது இயலாத காரியம் என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டு விட்டதாம்.இதனால் அவர்கள் அணியிலிருந்து வெளியேறும் யோசனையில் இருப்பதாகக்கூறப்படுகிறது.
இந்த அணி வாக்குகளைப் பிரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.இருப்பினும் உள்ளாட்சித் தேர்தல் என்பதால், அரசியலை விட நிறுத்தும்வேட்பாளர்கள்தான் முக்கியம் என்பதால் திமுக, அதிமுகவுக்கு இதனால் பெரியஅளவில் பாதிப்பு ஏற்படாது என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications