கைது முயற்சி: சங்கராச்சாரியார் மீது திருமாவளவன் கடும் புகார்
சென்னை:
காஞ்சி சங்கராச்சாரியார் தூண்டிவிட்டதால் தான் என்னைக் கைது செய்து அவமானப்படுத்த முதல்வர் ஜெயலலிதா முயல்கிறார்என விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளன் கூறியுள்ளார்.
5 ஆண்டுகளுக்கு முன் பதிவான ஒரு வழக்கில் இவரை திடீரென இப்போது கைது செய்ய அதிமுக அரசு முயன்றது. இதையடுத்துஎழும்பூர் நீதிமன்றத்தில் திருமாவளவன் ஆஜரானார். அவரை இன்று மீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம்உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து திருமாவளன், கிருஷ்ணப் பறையனார் உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் 4 முக்கிய பிரமுகர்கள் இன்றுநீதிமன்றத்தில் ஆஜராகினர். இதைத் தொடர்ந்து வழக்கை அடுத்த மாதம் 9ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி முனிரத்தினம்அறிவித்தார்.
இதன் பின்னர் வெளியே வந்த திருமாவளவன் நிருபர்களிடம் பேசுகையில்,
நான் எந்த வழக்கைக் கண்டும் ஓடி ஒளிய மாட்டேன். ஆனால், 5 ஆண்டுக்கு முன் பதிவான வழக்கில் என் பெயரையும்வேண்டுமென்றே சேர்த்து பழிவாங்க அதிமுக அரசு முயல்கிறது. இதன் பின்னணியில் இருப்பது சங்கராச்சாரியார் தான்.
அதிலும் ஆட்சிக்கு வந்த கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சும்மா இருந்த அதிமுக அரசு திடீரென இப்போது என்னைக் கைது செய்யமுயற்சிப்பது ஏன்?. மதவெறியைத் தூண்டும் இந்துத்துவாவை நான தீவிரமாக எதிர்க்க ஆரம்பித்திருப்பதால் தலித்களை ஒடுக்கச்சொல்லி ஜெயலலிதாவுக்கு சங்கராச்சாரியார் உத்தரவிட்டிருக்கிறார்.
மேலும் மனுதர்மத்தின் அடிப்படையில் அமைந்த இந்துப் பெயர்களை நீக்கிவிட்டு தூய தமிழ்ப் பெயர்களை நான் தலித்களுக்குசூட்ட ஆரம்பித்திருப்பதால் சங்கராச்சாரியாருக்கு என் மீது ஆத்திரம் வந்திருக்கிறது. அவர் தூண்டிவிட்டதால் தான் இந்தக் கைதுமுயற்சி நடக்கிறது.
இதனால் தான் என் மீது ஜெயலலிதா பொய் வழக்குப் போட்டிருக்கிறார்.
என் மீது வழக்குப் போட்டது கூட பரவாயில்லை. ஆனால், என்னை இரண்டு நாட்களாக போலீசார் தொடர்ந்து வந்துவிட்டு நான்தலைமறைவாகிவிட்டதாக பொய் சொன்னது தான் மிகவும் மன வருத்தம் தருகிறது.
நான் இந்த வழக்கு மட்டுமல்ல, எந்த வழக்கையும் கண்டு ஓடி ஒளிய மாட்டேன். என்னை அவமானப்படுத்த வேண்டும் என்றஒரே காரணத்துக்காகத் தான் இந்த வழக்கைப் போட்டுள்ளது அதிமுக அரசு. நான் எதையும் சந்திக்கத் தயார் என்றார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications