அதிமுக சார்பில் இன்னொரு வேட்பாளர் மனு தாக்கல்
சாத்தான்குளம்:
சாத்தான்குளத்தில் அதிமுக தலைமையின் உத்தரவுப்படி மகளிர் அணித் துணைச் செயலாளர் சுதந்திரவல்லி இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
ஏற்கனவே கட்சியின் வேட்பாளராக நீலமேகவர்ணம் அறிவிக்கப்பட்டு அவர் வேட்பு மனுவும் தாக்கல் செய்துவிட்டார். மாற்றுவேட்பாளராக அவரது மகன் கிதரவ ஆதித்தனும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆனால், நீலமேகவர்ணம் மீது கிரிமினல் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாகத் தெரிகிறது. அதே போல இவரது மகன் கதிரவஆதித்தன் மீதும் ஒரு கொலை வழக்கு உள்ளது. இதனால் இவர்களது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படலாம் என்று அதிமுககருதுகிறது.
இதையடுத்து முன்னெச்சரிக்கையாக இன்னொருவரையும் வேட்பாளராக்கியுள்ளார் ஜெயலலிதா. உடனே சாத்தான்குளத்தில்வேட்பு மனு தாக்கல் செய்யுமாறு மாநில மகளிர் அணி துணைச் செயலாளராக உள்ள சுதந்திரவல்லிக்கு நேற்றிரவு ஜெயலலிதாஉத்தரவிட்டார்.
வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று தான் கடைசி நாள் என்பதால் அவர் இன்று அவசர அவசரமாக வேட்பு மனுவை தாக்கல்செய்தார். இவர் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்தில் கவுன்சிலராகவும் உள்ளார். சிவகாசி அருகே உள்ள ஆழ்வார் திருநகரியைஅடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் இவர்.
இந் நிலையில் நேற்று அதிமுக மாணவரணியைச் சேர்ந்த சரவணகுமார், சாமுவேல் ராஜ், சரவணன் ஆகியோரும் அதிமுக சார்பில்வேட்பு மனு செய்தனர். இவர்கள் ஜெயலலிதாவின் அனுமதி பெற்று வேட்பு மனு தாக்கல் செய்தனரா அல்லது நீலமேகவர்ணத்தின்வேட்பு மனு தள்ளுபடியானால் நமக்கு எப்படியாவது வாய்ப்பு கிடைக்கும் என்ற நப்பாசையில் வேட்பு மனு போட்டனரா என்றுதெரியவில்லை,
அதே நேரத்தில் எதிர்க் கட்சியினர் இடையே புதிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதிமுக தலைமையே திட்டமிட்டு 5 பேரை களத்தில்நிறுத்தியிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். வேட்பாளர் என்றால் பிரச்சார வாகனங்கள் பயன்படுத்தலாம், தலைமை தேர்தல்ஏஜெண்டுள், பூத் ஏஜெண்டுகளை ஆகியோரை நியமிக்கலாம்.
ஒரு வேட்பாளருக்கு மட்டும் கட்சியின் கடிதத்தை தந்து இரட்டை இலையை ஒதுக்கி கொள்ளவும், மற்றவர்களுக்கு ஒதுக்கப்படும்பிரச்சார வாகன கோட்டாவை அதிமுக வேட்பாளருக்கு மறைமுகமாக மாற்றிவிடவும், மற்ற வேட்பாளரின் பெயரின் தங்களதுஏஜெண்டுகள் நிறைய பேரை வாக்குச் சாவடிகளில் நிறுத்தும் அதிமுக தலைமை திட்டமிட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியினரும்திமுகவினரும் கூறுகின்றனர்.
இதற்கிடையே நீலமேகவர்ணத்தில் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டால் நான் எனது மனுவை வாபஸ் வாங்கிக்கொள்வேன் என அதிமுகவின் இன்னொரு வேட்பாளரான சுதந்திரவல்லி கூறியுள்ளார். இவரது ஒரு மகளுக்கு கட்சியின் தலைவிஜெயலலிதாவின் பெயரையே சூட்டியுள்ளார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications