நாயுடுவை சந்தித்த கலாம், அத்வானி
சென்னை:
நக்சலைட்டுகளின் கண்ணி வெடித் தாக்குதலில் படுகாயமடைந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேரில்சந்தித்து உடல் நலம் விசாரித்தனர் ஜனாதிபதி அப்துல் கலாமும் துணைப் பிரதமர் அத்வானியும்.
இதன் பின்னர் நாயுடுவைச் சந்தித்த ஜனாதிபதி அப்துல் கலாமும் இன்று ஹைதாரபாத் வந்தார். அவரைஅமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்று நாயுடுவின் இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் நாயுடுவிடம்உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கிளம்பினார் கலாம்.
முன்னதாக நேற்று சிறப்பு விமானம் மூலம் திருப்பதி வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் இருந்து ஹைதராபாத்கொண்டு செல்லப்பட்டார். கழுத்து எலும்பு உள்பட 3 எலும்புகள் உடைந்து போயுள்ள அவருக்கு வீட்டிலேயேசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துபாய் செல்ல இருந்த இந்த விமானம் நேற்று முன் தினமே நாயுடுவுக்காக சென்னையில் இருந்து திருப்பதிக்குஅனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து துபாய் பயணிகள் மும்பை அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்துவேறு விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் நாயுடுவுக்கு சிகிச்சை தர அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் தனி ஹெலிகாப்டரில் திருப்பதிக்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே நாயுடு மீது கண்ணி வெடித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு முதல்வர் ஜெயலலிதாவும் திமுக தலைவர்கருணாநிதியும் கடும் கண்டனம் தெவித்துள்ளனர்.
இதற்கிடையே கிளேமோர் மைன் எனப்படும் கண்ணி வெடியை 6 மாதங்களுக்கு முன்பே திருப்பதி மலைப்பாதையில் நக்சலைட்டுகள் புதைத்துவிட்டதாகவும், திருப்பதி கோவிலில் கருட சேவையின்போது ஆந்திர முதல்வர்அங்கு வருவது மரபு என்பதால், அந்த நாளில் தாக்குதல் நடத்த 6 மாதத்துக்கு முன்பே திட்டம்தீட்டப்பட்டுவிட்டதாகவும் தெரிகிறது.
மேலும் நாயுடுவின் கார் வரிசையில் 20 கார்கள் வந்துள்ளன. இதில் பெரும்பாலானவை வெள்ளை நிறஅம்பாசிடர் கார்கள். இதில் சரியாக நாயுடுவின் காரை அடையாளம் வைத்து கண்ணிவெடியை வெடிக்கச்செய்துள்ளனர் நக்சலைட்டுகள்.
மேலும், நாயுடுவின் கார் வரும் நேரம், அந்த கார் வரிசையின் வேகம் இதையும் மிகத் துல்லியமாக அறிந்துவைத்து குண்டை வெடிக்கச் செய்துள்ளனர். இது ஆந்திர போலீசாருக்கும் மத்திய உளவுப் பிரிவினருக்கும் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரின் ரகசிய வயர்லெஸ் உரையாடல்களை நக்சலைட்டுகள் தொடர்ந்து ஒட்டு கேட்டு வந்திருக்க வேண்டும்என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இந் நிலையில் இன்று தனது வீட்டில் நிருபர்களைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு, இது எனக்கு இறைவன் கொடுத்துள்ளமறு ஜென்மமாகவே கருதுகிறேன். இந்த மறு பிறவியை நான் மக்களுக்கே அர்ப்பணிக்கப் போகிறேன் என்றார்
-
ரூ.500+ கோடிக்கு சொத்து இருக்கு.. ஆனாலும் ரூ.67,000க்கு TVS XL வாங்கிய விஜய்.. என்ன காரணம் தெரியுமா -
இது ஆகுறது இல்ல.. தேர்தல் வேலையை விட்டுவிட்டு புகார் கொடுப்பதே வேலையாகிப்போச்சு விஜய்க்கு -
"நேர்காணல் கூட இல்லை.." விஜய் வேட்பாளர்களை அறிவிக்கும் போதே போராட்டத்தில் இறங்கிய தவெகவினர் -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்களை அறிவித்த சில நிமிடங்களில் விஜய்க்கு அதிர்ச்சி.. பறக்கும் படை அதிகாரிகள் ரெய்டு -
பெரம்பூர் தொகுதியில் விஜய்யை எதிர்க்கும் திலகபாமா? அன்புமணி முடிவுக்கு பின் என்ன காரணம்? -
Vijay: "எனக்காக விட்டு கொடுத்து இருக்காரு" கட்டி பிடித்து விஜய் சொன்ன அந்த வார்த்தை! யார் இந்த சிவா? -
திருச்சி கிழக்கில் தேர்தல் அலுவலகம் கூட அமைக்காத தவெக.. 25 நாட்களில் விஜய்யால் மாற்றிவிட முடியுமா? -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
விஜய்யை எதிர்த்து.. பெரம்பூரில் களமிறங்கும் பாமகவின் திலகபாமா! அன்புமணியின் மூவ்! -
என்ன விஜய் இதெல்லாம்? கம்பத்தில் கதி கலங்கிய தவெக! 'சாதி வெறியன்' என அறிவித்துக்கொண்டவருக்கு சீட்! -
என் மகிழ்ச்சி இதுதான்! இறுதியாக ஒரே ஊரில் சேர்ந்து விட்டோம்! திரிஷாவின் பீலிங் ஆன போஸ்ட்! இதுதான் பதிலடியா?












Click it and Unblock the Notifications