வைகோ இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோஉள்ளிட்ட 9 மதிமுகவினரும் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.
வைகோ உள்ளிட்டவர்கள் மீதான பொடா வழக்கில் சாட்சியங்களின் விசாரணையும், குறுக்கு விசாரணையும்நடந்து வருகிறது. இன்றும் விசாரணை நடைபெறவுள்ளது.
இதையொட்டி வைகோ வேலூர் சிறையிலிருந்து இன்று கொண்டு வரப்படுகிறார். அதேபோல, மற்ற 8மதிமுகவினரும் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்படுகிறார்கள்.
வைகோ தவிர மற்றவர்களான கணேசமூர்த்தி, செவந்தியப்பன், பூமிநாதன், மணியம், இளவரசன், அழகுசுந்தரம்,கணேசன், நாகராஜன் ஆகிய 8 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.இவர்களது மனுக்கள் வரும் 6ம் தேதி விசாரிக்கப்பட்டு தீர்ப்பு கூறப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications