விஜயக்குமாரின் பாதயாத்திரை: மார்க்சிஸ்ட் கண்டனம்
சென்னை:
அதிரடிப்படை கூடுதல் டி.ஜி.பி. விஜயக்குமாரின் பாதயாத்திரைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் வரதராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டு வீழ்த்தப்பட்டதையொட்டி பன்னாரி அம்மன் கோயிலிருந்து நடைப்பயணமாக35 கி.மீ. தூரம் நடந்து நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு வரப்போவதாக விஜயக்குமார் அறிவித்திருக்கிறார்.இது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
விஜயக்குமார் என்ற தனிமனிதரின் வழிபாட்டு உரிமையை யாரும் கேள்வி எழுப்பமாட்டார்கள். ஆனால் அரசுஎந்திரத்தின் தலைமைப் பொறுப்பேற்ற ஓர் அதிகாரி, அரசுப் பதவியில் அரசாங்கக் கடமையாற்றிய பணிக்காககுறிப்பிட்ட மதம் சார்ந்த வழிபாட்டு நடவடிக்கையில் இறங்குவது, தான் ஏற்றுக் கொண்ட மதச்சார்பற்றதன்மையிலிருந்து மீறுவதாகும்.
மேலும் இவ்வாறு ஒரு வித்தியாசமான நடவடிக்கையில் ஈடுபடுவது மக்களிடம் ஒரு மாயக் கருத்தை உருவாக்கமுயல்கிறார் எனக் கருத இடமளிக்கும். இதன் மூலம் தமிழக முதல்வரை திருப்தி செய்ய நினைக்கிறார் என்றசந்தேகமும் எழ வாய்ப்புள்ளது.
ஓர் அரசு எந்திரத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் தனது திறமையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.இவ்வாறு மூட நம்பிக்கையை வளர்க்க முயல்வது காவல்துறையின் கெளரவத்தை குறைக்கும் செயலாகும் என்றுகூறியுள்ளார்.
விஜயக்குமாருக்கு பத்மஸ்ரீ?:
இதற்கிடையே விஜயகுமாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யதிட்டமிட்டுள்ளது.
வீரப்பனையும் அவனது கும்பலையும் சுட்டு வீழ்த்திய அதிரடிப்படையினர் அனைவருக்கும் பதவி உயர்வுவழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் ஐ.பி.எஸ். அந்தஸ்து பெற்றவர்களுக்குஇதுவரை எந்த மாநிலத்திலும், பதவி மூப்பு இல்லாமல் பதவி உயர்வு வழங்கியது கிடையாது. இப்பதவி உயர்வுதொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய உள்துறைக்கு மட்டுமே உள்ளது.
விஜயகுமாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கும்படி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய தமிழக அரசுமுடிவெடுத்துள்ளது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications