நாடாளுமன்றத்தில் அமளி-துமளி
டெல்லி:
சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட விவகாரம் இன்று மக்களவையிலும் மாநிலங்களவையிலும் வெடித்தது.
கைது நடவடிக்கையைக் கண்டித்து தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் எதிராக பா.ஜ.கவினர் குரல் எழுப்ப பதிலுக்கு அதிமுக,கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதனால் பெரும் அமளி, துமளி நிலவியது.
மக்களாவையில் இந்த விவகாரத்தை பா.ஜ.க. இன்று எழுப்பியது. அப்போது பேசிய பா.ஜ.க எம்பி மல்ஹோத்ரா ஜெயேந்திரரை தமிழகஅரசு கேவலப்படுத்தி வருகிறது. அவருக்கு எதிராக பொய்யான சாட்சிகளை உருவாக்கி வருகிறது. பலரையும் துன்புறுத்தி பொய்வாக்குமூலங்கள் பெற்று வருகிறது.
இதில் மத்திய அரசு அமைதி காத்து வருவது நல்லதல்ல என்றார்.
இதற்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தக் கைது விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.ஆனாலும், ஜெயேந்திரரின் உடல் நிலையைக் கருத்திக் கொண்டு முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதினார்.
இந்த விஷயம் இப்போது நீதிமன்றத்தில் உள்ளது. சட்டம் தன் கடமையைச் செய்ய பா.ஜ.க. அனுமதிக்க வேண்டும். இந்த விஷயத்தில்நாடாளுமன்றத்தில் ஏதும் செய்ய முடியாது என்றார்.
இந்தக் கைதில் மத்திய அரசுக்கும் தொடர்பிருப்பதாக பா.ஜ.க எம்பிக்கள் குற்றம் சாட்டினர். அப்போது பேசிய நாடாளுமன்றவிவகாரத்துறை இணையமைச்சர் சுரேஷ் பச்செளரி,
இந்தக் கைதுக்கும் மத்திய அரசுக்கும் துளியும் சம்பந்தமில்லை. கைது குறித்து மத்திய அரசுக்கு ஆந்திர முதல்வர் தகவல் ஏதும்தெரிவில்லை. தமிழக போலீசார் கைது செய்ய வந்துள்ளதாக அவர் பிரதமரிடமோ அல்லது வேறு யாரிடமும் கூறவில்லை. அதற்கானஅவசியமும் இல்லை.
இந்த விஷயத்தில் பா.ஜ.க தவறான பிரச்சாரம் செய்கிறது என்றார்.
அப்போது காங்கிரஸ் எம்பிக்களுக்கும் பா.ஜகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பல உறுப்பினர்கள் தவறாகப்பேசியதால் அவற்றையெல்லாம் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்தார்.
அப்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் முகம்மத் சலீம், ஜெயேந்திரரின் கைதை வைத்து பா.ஜ.க. அரசியல் லாபம் அடிக்கப்பார்ப்பது மிக மட்டமான செயல். மாநில அரசின் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஒரு கைது விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதேமுறையற்றது என்றார்.
அவருக்கெதிரான பா.ஜ.க எம்பிக்கள் கோஷமிட கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஆதரவாகக் குரல் எழுப்பினர். யார் என்னசொல்கிறார்கள் என்பதே புரியாத அளவுக்கு கூச்சல்-குழப்பம் நிலவியது.
அப்போது பேசிய பாஜக எம்பிக்கள், சங்கராச்சாரியாரை சிறையில் அடைத்தது தவறு. அவரை தனி வீட்டிலாவது வைத்திருக்கலாம்என்றனர். ஆனால், இதற்கு பதில் தந்த திமுக உறுப்பினர்கள், சட்டத்தின் முன் அனைவரும் சமம் தான். இதனால் யாருக்கும் சிறப்புசலுகையெல்லாம் காட்டத் தேவையில்லை என்றனர்.
மாநிலங்களவையில் இந்த விவகாரத்தைக் கிளப்பிய பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ், ஜெயேந்திரரின் கைது இந்து மதத்தின் மீதானதாக்குதல்.
சிறையில் பூஜை செய்யக் கூட அவருக்கு வசதி செய்து தர மறுக்கிறார்கள். அவர் வைக்கப்பட்டிருக்கும் சிறை அறை மிக மிக மோசமானதாகஉள்ளது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துவிட்டேன். அவரை தனி வீட்டில் வைத்திருக்கலாம். சிறையில் ஏன் அடைத்தார்கள் என்றார்.
இதற்கு பதில் தந்த அதிமுக எம்.பி பிஜி. நாராயணன், அவையில் சுஷ்மா சுவராஜ் தவறான தகவல்களைத் தந்து கொண்டிருக்கிறார்.சங்கராச்சாரியாருக்கு அனைத்து வசதிகளையும் மாநில அரசு செய்து கொடுத்துள்ளது. இதை அவரே நீதிபதியிடம் தெரிவித்திருக்கிறார்.
மாநில அரசு தனது கடமையைத் தானே செய்தது. ஆனால், இந்த வழக்கையே வேறு மாநிலத்துக்கு மாற்றுமாறு அத்வானி போன்றவர்கள்சொல்வது ஏன்?. இந்த விவகாரம் எங்கள் மாநில சட்டம்-ஒழுங்கு தொடர்பானது என்றார்.
அப்போது அவருக்கு எதிராக பா.ஜ.க, சிவசேனை ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் கோஷமிட்டனர். பதிலுக்கு அதிமுக, ஆர்.ஜே.டி,கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கோஷமிட இதனால் அவையில் அமளி ஏற்பட்டது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications