ஜெவிடம் ஸ்டாலின் ரூ.21 லட்சம் நிதியளிப்பு
சென்னை:
முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு திமுக தலைவர் கருணாநிதி வழங்கிய ரூ.21 லட்சத்தை திமுக துணை பொதுச் செயலாளர் ஸ்டாலின்முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரில் வழங்கினார்.
ஸ்டாலின் சென்னை கோட்டையில் ஜெயலலிதாவை காலை 11 மணிக்கு சந்தித்தார். கருணாநிதி சார்பில் ரூ.21 லட்சம் நிதியைஜெயலலிதாவிடம் ஸ்டாலின் வழங்கினார். அப்போது, தனது நன்றியை கருணாநிதியிடம் தெரிவிக்கும்படி ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.
ஜெயலலிதாவுக்கு கருணாநிதி எழுதிய கடிதத்தையும் ஸ்டாலின் முதல்வரிடம் வழங்கினார். அந்த கடிதத்தில் கருணாநிதி கூறியிருந்ததாவது:
இயற்கையின் கொடுமைக்கு ஆளான மக்களுக்கு ஆதரவு தர மத்திய-, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள பணிக்கு உறுதுணையாக என்கடமையையும் ஆற்றிடும் வகையில், கண்ணம்மா திரைப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதுவதற்கு எனக்கு வழங்கப்பட்ட ரூ.10லட்சத்தையும், மண்ணின் மைந்தன் திரைப்படத்துக்கு திரைக்கதை, -வசனம் எழுதுவதற்காக அளிக்கப்பட்ட ரூ.11 லட்சத்தையும் ஆகமொத்தம் 21 லட்சம் ரூபாயை முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு வழங்குகிறேன் என்று கூறியிருந்தார்.
ஜெயலலிதாவை சந்தித்தபின் வெளியே வந்த ஸ்டாலின் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:
கருணாநிதி பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் வழங்கினார்.பின்னர் திமுக சார்பில்வசூலித்த ரூ.20 லட்சம் நிதியை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வழங்கினார். இப்போது அவர் கதை, வசனம் எழுதியதால் கிடைத்த ரூ.21லட்சத்தை அவர் சார்பில் முதல்வரிடம் வழங்கினேன்.
ஊதியத் தொகை 2 நாட்களுக்கு முன்பு தான் கிடைத்தது. அது கிடைத்ததும் முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். இன்று காலை 11மணிக்கு நேரம் ஒதுக்கி தரப்பட்டது. அதன்படி கருணாநிதியின் மகனாக முதல்-வரைச் சந்தித்து நிதி வழங்கினேன் என்று கூறினார்.
ஸ்டாலினுடன் பரணி குமார் எம்.எல்.ஏ.வும் உடன் சென்றிருந்தார்.
ஒரே நாளில் ரூ.12.70 கோடி நிதியளிப்பு:
இதற்கிடையே சுனாமி நிவாரணப் பணிகளுக்காக இன்று ஒரே நாளில் ரூ. 12.70 கோடி அளவுக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்குஜெயலலிதாவிடம் நிதி வழங்கப்பட்டது.
இன்று ஜெயலலிதாவை 32 பேர் சந்தித்து ரூ. 12.70 கோடி அளவுக்கு நிதி வழங்கினர். பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்டாஸ்மாக் நிறுவன ஊழியர்கள் சார்பில் ரூ. 5.1 கோடியும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வளர்மதி, பல்வேறு அரசுத் துறைகள் சார்பாகரூ. 31.5 லட்சமும்,
அதிமுக எம்.பி. பி.ஜி.நாராயணன், துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலம் ஆகியோர் அதிமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் சார்பில் ரூ.19.4 லட்சமும், டிஜிபி கோவிந்த் காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் சார்பில் ரூ. 2.34 கோடியும் கொடுத்தனர்.
இதேபோல, சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன், ஆணையர் விஜயக்குமார் ஆகியோர் ரூ. 37.15 லட்சம், நடிகர்சிரஞ்சீவி ரூ. 10 லட்சம், சிலம்பரசன் ரூ. 2 லட்சம், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், அதிமுக எம்.பி. பி.எச்.பாண்டியன் ஆகியோர் தலா ரூ. 1லட்சம் வழங்கினர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications