நாளை மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்?

நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு வழி வகுக்கும் மசோதா 12 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமாகும் நிலை உருவாகியுள்ளது.
பெரும் அமளிக்கு மத்தியில் தொடங்கி கடந்த 3 மாதங்களாக நடைபெற்றுவரும் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைவதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே உள்ளன.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் உயர்கல்வியில் ஓபிசி வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் க்ரீமி லேயரை நீக்குதல் ஆகிய பிரச்னைகள் லோக்சபாவில் இன்று விவாதிக்கப்படும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் பிரச்னையால் நாடாளுமன்ற இரு அவைகளும் எந்த விவாதமும் இன்றி ஒத்திவைக்கப்பட்டன. நாளை மீண்டும் அவை கூடுகிறது.
இந்நிலையில் சென்னையில் நேற்று நடந்த சீர்திருத்த திருமண விழாவில் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி, நான் கேள்விப்படுகிறேன். வெகு விரைவில், ஓரிரு நாளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு வரவிருக்கிறது என்ற நற்செய்தியைக் கேள்விப்படுகிறேன்.
பெரியாருடைய கொள்கைகளை, தமிழகத்திலே மாத்திரமல்ல- வட புலத்திலே இருக்கின்ற மாநிலங்களிலும் இன்றைக்கு படிக்க விரும்புகிறார்கள். உணர விரும்புகின்றார்கள். பின்பற்ற விரும்புகிறார்கள். அதை ஊக்கப்படுத்த வேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்.
இங்கே கவிஞர் கனிமொழி பேசும்போது பெண்கள் இன்னும் முன்னேற வேண்டு மென்ற கருத்தை பெண்களுக்குரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென்ற கருத்தை எடுத்துச் சொன்னார். ஒருவேளை அவர் நாடாளுமன்ற மாநிலங்களவையில் இருக்கின்ற காரணத்தால், முன்கூட்டியே ரகசியத்தை தெரிந்து சொன்னாரோ என்னவோ, எனக்குப் புரியவில்லை என்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இந்தக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்பதை சூசகமாகத் தெரிவித்திருந்தார் கருணாநிதி.
கேபினட் ஆலோசனை:
இந்த மசோதாவுக்கு மத்திய அரசில் அங்கம் வகித்துள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவரும் ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அவர் இந்த மசோதாவிலும் உள் ஒதுக்கீடு கோரி வருகிறார். பிற்பட்ட, சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இந்த இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்பது லாலுவின் நிலை.
இந் நிலையில் லாலுவை காங்கிரஸ் ஒரு வழியாக சமாதானப்படுத்திவிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து நாளையே இந்த மசோதா நாடாளுமன்றத்தி்ல் தாக்கலாகலாம் என டெல்லி வட்டாரங்கள் பரபரக்கின்றன.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications