முதலைகளுக்கும் கு.க.-தமிழக பல்கலை சாதனை!
சென்னை : உலகிலேயே முதல் முறையாக முதலைகளுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்து சாதனை படைத்துள்ளனர் தமிழக கால்நடைப் பல்கலைக் கழக மருத்துவர்கள்.
தாம்பரத்துக்கு அருகே உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஆண் சிங்கங்கள் மற்றும் முதலைகளுக்கு கருத்தடை ஆபரேஷன் நடந்தது.
பாரம்பரியம் தெரியாத சிங்கங்கள் அதிகம் உருவாவதைத் தடுக்கவும், பெருகிக் கொண்டு போகும் முதலைகளின் இனப்பெருக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வரவும் இந்த கருத்தடை ஆப்ரேஷன் நடந்துள்ளதாக தனுவாஸ் எனப்படும் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் டாக்டர் தங்கராஜ் தெரிவித்தார்.
இந்த சிகிச்சைக் குறித்து டாக்டர் தங்கராஜ் கூறியதாவது:
முதலைகள் வருடத்திற்கு இரு முறை 25 முதல் 30 முட்டைகள் வரை இடும். ஆண் முதலையின் ஆண்குறியின் மேல் நீளவாக்கில் ஓடை போன்ற பகுதி காணப்படும். இனச்சேர்க்கையின்போது இந்த ஓடை வழியாக விந்து கசிந்து பெண் உறுப்பில் படிய வைக்கும். பொதுவாக வெளித்தோற்றத்தை வைத்து ஆண், பெண் முதலைகளை இனம் பிரித்துப் பார்ப்பது கடினம்.
சைலசின்-கீட்டமின் என்ற மயக்க மருந்தை ஊசி மூலம் சதை வழியாக செலுத்தி, முதலை மயங்கிய நிலைக்கு வந்ததும், அதன் ஆண்குறியை வெளியே எடுத்து ஓடை போன்ற பகுதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றி பின் தையலிட்டு மூடுகிறார்கள். இதனால் ஆண் முதலைகள் பெண் முதலைகளோடு சேரலாம், ஆனால் இனப்பெருக்கம் நடக்காது.
அதேநேரம் இந்த சிகிச்சையால் முதலைகளில் இயல்பான நடவடிக்கைகள் பாதிக்கப்படாது.
இதே போல சர்க்கஸ் மற்றும் தனியார் வசம் இருந்த பாரம்பரியம் தெரியாத 18 ஆண் சிங்கங்களின் இனப்பெருக்கத்தைத் தடுக்க கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை சராசரியாக மூன்று முதல் ஐந்து மணி நேரம் நடந்துள்ளது, என்றார் தங்கராஜ்.
முதலைகளுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்திருப்பது உலகிலேயே இதுதான் முதல்முறை. அந்தப் பெருமை கால்நடைப் பல்கலைக் கழக அறுவை சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் சுரேஷ்குமார், பேராசிரியர் ஜஸ்டின் வில்லியம், இணைப் பேராசிரியர் தனஞ்செயராவ் ஆகியோருக்குக் கிடைத்துள்ளது. இவர்கள்தான் இந்த சிகிச்சையைச் மருத்துவ நிபுணர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications