7 மாத கர்ப்பிணி காதலிக்கு தாலி கட்டிய காதலன்!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஏழு மாத கர்ப்பிணி காதலிக்கு அவரது காதலன் தாலி கட்டினார்.

விழுப்புரம் அருகே உள்ளது பள்ளியந்தூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் கோவிந்தன் (27). அதே பகுதியைச் சேர்ந்தவர் மதுரை என்பவரின் மகள் ரஞ்சிதா
(20).

இவர்கள் இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இதனால் ரஞ்சிதா கர்ப்பமானார்.

தான் கர்ப்பமாக இருப்பது வெளியே தெரிந்தால் அவமானம் என்றும் அதனால் தன்னை உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவரது காதலன் கோவிந்தனை வற்புறுத்தியுள்ளார். ஆனால் இதற்கு கோவிந்தனும் அவரது பெற்றோர்களும் மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் பள்ளியந்தூர் கிராம பிரமுகர்களுடன் முன்பு விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அனந்தபுரம் சிவன் கோவிலில் பிப்ரவரி 1 -ம் தேதி ரஞ்சிதாவை கோவிந்தன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ரஞ்சிதா குடும்பத்தினர் அனந்தபுரம் சிவன் கோவிலுக்கு சென்றனர். ஆனால் கோவிந்தன் குடும்பத்தினர் அங்கு வரவில்லை. மாறாக தலைமறைவாகிவிட்டனர்.

இதுகுறித்து ரஞ்சிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோயிலில் ஊராட்சி மன்ற தலைவரர் பள்ளியந்தூர் தேவராசு, குப்பம் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் கோவிந்தனுக்கும் 7 மாத கர்ப்பிணி ரஞ்சிதாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+