ஸ்வைன் - ஆந்திராவில் இருவர் பலி - இதுவரை 107 பேர் மரணம்
ஹைதராபாத்: பன்றிக் காய்ச்சலுக்கு ஆந்திராவில் இன்று இரண்டு பேர் உயிரிழந்தனர். அங்கு பன்றிக் காய்ச்சலுக்கு இவர்களே முதல் பலி ஆவர். இதன் மூலம் இதுவரை நாடு முழுவதும் 107 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்வைன் ப்ளு எனப்படும் பன்றி காய்ச்சல் நேற்று மாலை வரை இந்தியா முழுவதும் சுமார் 103 பேரின் உயிரை குடித்திருந்தது.
நேற்று இரவு பெங்களூரை சேர்ந்த 38 வயது நபர் ஒருவர் ஸ்வைன் ப்ளூ நோய்க்கு பலியானார். எலஹங்கா பகுதியை சேர்ந்த இவர் கடந்த ஒரு வாரமாக பன்றி காய்ச்சல் அறிகுறியால் பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறார்.
ஆனால் மிக தாமதமாக இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் மரணமடைந்தார். ஆனால், அவரது ரத்த மாதிரி பரிசோதனை நேற்று தான் வெளியிடப்ப்டடது. அதில் அவர் பன்றி காய்ச்சல் காரணமாக இருந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரது பெயர் உள்ளிட்ட விவரங்களை சுகாதார துறையினர் வெளியிடவில்லை.
மேலும் பெங்களூரில் வேலை பார்த்து வந்த திருச்சியை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப என்ஜினியரும் ஒருவரும் பன்றி காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார். அவரது வயது 31 என்றும், அவர் பெங்களூரிலுள்ள அமெரிக்க நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் லேக்சைடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று மாலை மூச்சு திணறல் அதிகமாகி மரணடைந்தார். இதையடுத்து கர்நாடகாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திராவில் முதல் பலி...
இந்நிலையில் நேற்று இரவு 25 வயதான வாலிபர் ஒருவர் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் மரணமடைந்தார். இது ஆந்திர மாநிலத்தில் பன்றி காய்ச்சல் ஏற்பட்டுள்ள முதல் பலி. இவரை தொடர்ந்து கார்பரேட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தந்த 35 வயது பெண் ஒருவரும் பலியாகியுள்ளார்.
இந்தியாவில் 107 பேர்...
உலக அளவில் இந்த நோய் நேற்று வரை சுமார் 3 ஆயிரத்து 049 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2 லட்சத்து 68 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக பிரேசில் நாட்டில் 644 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் 556, அர்ஜென்டினாவில் 465 பேர் உயிரை பறிகொடுத்துள்ளனர். இந்தியாவில் இந்த எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications