உலகத் தமிழ் மாநாடு திடீர் ஒத்திவைப்பு -ஜூனில் நடைபெறலாம்

கோவையில் ஜனவரி 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை 9வது உலகத் தமிழ் மாநாடு நடைபெறும் என முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.
ஆனால் உலகத் தமிழ் மாநாடு குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். விமர்சனமும் செய்திருந்தனர்.
ஈழத் தமிழர் பிரச்சினையை திசை திருப்பவே இந்த மாநாடு என இயக்குநர் சீமான் கூறியிருந்தார்.
இந்த நிலையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று உலகத் தமிழ் மாநாட்டுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் மாநாட்டுத் தேதியில் மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. அதன்படி ஜனவரி மாதம் நடைபெறுவதாக இருந்த மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் அறிஞர்கள் கட்டுரைகள் தயாரிக்க கால அவகாசம் தேவை என்று கோரியதால் மாநாடு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரிக்குப் பதில் ஜூன் அல்லது ஜூலை மாதம் மாநாட்டை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில் நிதியமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழக துணைத் தலைவர் முனைவர் வா.செ.குழந்தைசாமி, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மா.ராசேந்திரன்,
முனைவர் அவ்வை நடராஜன், மணவை முஸ்தபா, கவிப் பேரரசு வைரமுத்து,
பேராசிரியர் ராசராசேசுவரி, கவிஞர் கனிமொழி, முனைவர் மா.நன்னன், கவிக்கோ அப்துல் ரகுமான், முனைவர் சிலம்பொலி செல்லப்பன், கவிவேந்தர் கா.வேழவேந்தன், பேராசிரியர் சாலமன் பாப்பையா, து.ரவிக்குமார் எம்.எல்.ஏ., முனைவர் பொன். கோதண்டராமன், முனைவர் க.ப.அறவாணன், ஐராவதம் மகாதேவன், முத்துக் குமாரசுவாமி, முனைவர் சுப்பராயலு ஆகியோர் பங்கேற்றனர்.
-
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே!












Click it and Unblock the Notifications