சுய தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ரூ. 5 லட்சம் கடன் – தமிழக அரசின் புதிய திட்டம்
சென்னை: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்க 15 சதவீத மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கும் புதிய திட்டம் இந்த நிதியாண்டிலிருந்து செயல்படுத்தப்படுகிறது.
சட்டப் பேரவையில் இத்தகவை ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி புதன்கிழமை தெரிவித்தார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் பேரவையில் நேற்று நடைபெற்றது.
விவாதத்துக்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் கூறியது:
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையிலும் வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் புதிய திட்டம் நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உற்பத்தி அல்லது சேவை, வணிகம் சார்ந்த தொழில்களைத் தொடங்க விரும்பினால், அவர்களுக்கு 15 சதவீத மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை வங்கிகள் மூலமாக கடன் உதவி வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம் ரூ.100 கோடியில் 10 ஆயிரம் பேருக்கு சுய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
கூடுதலாக 15 தொழில்கள் சேர்ப்பு: தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கை 2008-ன் படி, மானியம் பெற தகுதியான தொழில்கள் விவரம்:
பாப்கார்ன் மற்றும் ஐஸ்கிரீம் தயாரித்தல், கலப்பு உரம் தயாரித்தல், ஜவுளி ஆலைகள் (நூற்பாலை மற்றும் பின்னலாடை உள்பட), மாவு அரைவு தொழில், உணவு விடுதிகள், சமையல் எண்ணெய் மற்றும் கரைப்பான்கள் உபயோகித்து எண்ணெய் பிரித்தெடுத்தல், அரிசி ஆலை, வெல்லம் தயாரித்தல், போட்டோ எடுத்தல் மற்றும் கலர் போட்டோ தயாரித்தல், ஒளி அச்சு நகல் எடுத்தல், மின் சலவை தொழில், செங்கல் தொழில் (சிமென்ட் ஹாலோ பிளாக், இயந்திரங்கள் மற்றும் நிலக்கரி சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் செங்கல் தவிர), காபிக் கொட்டை வறுத்தல் மற்றும் அரைத்தல், கடிகாரம் பழுதுபார்த்தல், ஒளி மற்றும் ஒலி நாடா பதிவு செய்தல் ஆகிய தொழில்கள் மானியம் பெற தகுதியான தொழில்களாக மாற்றியமைக்கப்படும்.
இப்போது இந்தத் தொழில்கள் மானியம் பெற தகுதியற்ற தொழில்களின் பட்டியலில் உள்ளன.
வேலைவாய்ப்பு முகாம்கள்: தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் திறன் படைத்தோர் ஆகியோரை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டத் தொழில் மையங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்.
புதிய நிறுவனங்கள் மானியங்களைப் பெற உற்பத்தி தொடங்கிய நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என உள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்த விண்ணப்ப கால அளவு 6 மாதத்திலிருந்து ஓர் ஆண்டாக உயர்த்தப்படும்... என்றார் அமைச்சர்.
டாம்கோ திட்டத்தின் கீழ் 200 ஆட்டோக்கள்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக (டாம்கோ) திட்டத்தின் கீழ், ஆட்டோ தொழில் கூட்டுறவு சங்கங்களின் மூலமாக சிறுபான்மையின உறுப்பினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் 200 ஆட்டோக்கள் கொள்முதல் செய்து வழங்கப்படும்.
இந்தத் திட்டம் தாய்கோ வங்கி மூலம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி.
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ












Click it and Unblock the Notifications