அதிமுக கூட்டணியில் யார் யார்-மதுரையில் அறிவிக்கிறார் ஜெ.?

திமுகவை விட படு வேகமாக காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளார் ஜெயலலிதா. கடந்த நான்கு ஆண்டு காலம் தூங்கிக் கொண்டிருந்த அவர் தற்போது படு சுறுசுறுப்பாக களத்தில் குதித்துள்ளார். திமுகவையும், முதல்வர் கருணாநிதியையும் ஊர் ஊராக கூட்டம் போட்டு சரமாரியாக தாக்கி வருகிறார். மறுபக்கம் கூட்டணியையும் பலப்படுத்த ஆரம்பித்துள்ளார்.
கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் கட்சிகளோடு சில புதிய கட்சிகளையும் அதிமுக சேர்த்து வருகிறது. தற்போதைய நிலையில் அதிமுக கூட்டணியில், மதிமுக, சிபிஎம், சிபிஐ, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, குடியரசுக் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இவை தவிர சில முக்கிய கட்சிகளும் கூட்டணிக்கு வரும் என அதிமுக திடமாக நம்புகிறது. இதுதொடர்பாக ரகசியப் பேச்சுக்களும் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் தனது திருச்சி கண்டனக் கூட்டத்தின்போது கூட்டணியை ஜெயலலிதா அறிவிப்பார் என அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. தற்போது உள்ள கட்சிகளுக்குரிய சீட்கள் எத்தனை என்பது கிட்டத்தட்ட பேசி முடிவாகி விட்டது. எனவே திருச்சி கூட்டத்தில் கூட்டணியை அம்மா அறிவிக்கலாம் என்கின்றனர் அதிமுக வட்டாரத்தினர்.
ஒருவேளை இதில் தாமதம் ஏதாவது ஏற்பட்டால் மதுரையில் கூட்டணி குறித்து நிச்சயம் அறிவிப்பார் ஜெயலலிதா. கோவையில் நீங்கள் விரும்பிய கூட்டணி அமையும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். எனவே திருச்சி அல்லது மதுரையில் அது எந்தக் கூட்டணி என்பதை அவர் அறிவித்து தொண்டர்களுக்கு மேலும் குஷியேற்றுவார் என்கிறார்கள்.
அதிமுக கூட்டணிக்கு முக்கிய கட்சி ஒன்று வரப் போவதாக சில காலமாகவே பேச்சு நிலவி வருகிறது. தற்போது அந்தக் கட்சியுடன் கிட்டத்தட்ட உடன்பாடு காணப்பட்டு விட்டதாகவும், அதனால்தான் திருச்சி அல்லது மதுரை கூட்டத்தில் கூட்டணியை அறிவிக்க ஜெயலலிதா திட்டமிட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications