மதானி கைதாவதில் தொடர்ந்து தாமதம்-கேரள போலீஸ் விளக்கம்
கொல்லம்: மதானியை கைது செய்ய வந்துள்ள கர்நாடக போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படும் என கொல்லம் காவல்துறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
பெங்களூரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தொடர்பு குண்டுவெடிப்புகளில் வங்கதேசத்தை சேர்ந்த நசீர் உள்ளிட்ட 2 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கேரளாவை சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானிக்கும் தொடர்பு இருப்பதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை இவ்வழக்கில் 31வது குற்றவாளியாக மதானியை சேர்த்து போலீசார் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கிற்கும், தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறிய மதானி தன்ணை கர்நாடக போலீசார் வேண்டுமென்றே இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்த்துள்ளதாகவும் முன்ஜாமீன் கேட்டு பெங்களூர் சி்ட்டி நீதிமன்றம், செசன்ஸ் நீதிமன்றம், ஐகோர்ட் ஆகியவற்றில் மனுதாக்கல் செய்தார்.
ஆனால் நீதிமன்றங்கள் அம்மனுக்களை தள்ளுபடி செய்து அவரை கைது செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து நேற்று பெங்களூர் டிஎஸ்பி சித்தராமைய்யா தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படையினர் கொச்சி வழியாக கொல்லம் வந்தனர். மதானியை கைது செய்வது குறித்து கொல்லம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்சிதாவுடன் ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து எஸ்பி ஹர்சிதா நிருபர்களிடம் கூறியதாவது,
கொல்லத்திற்கு மதானியை கைது செய்ய வந்துள்ள கர்நாடக போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். இதுகுறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முழு பாதுகாப்பு அளிக்கப்படு்ம். சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை. முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
கேரள மாநில உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் தற்போது விஜயவாடாவில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளதால் அவருடன் கலந்து காவல்துறை அதிகாரிகள் பேசிய பின்புதான் மதானி கைது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications