மதானி கைதாவதில் தொடர்ந்து தாமதம்-கேரள போலீஸ் விளக்கம்
கொல்லம்: மதானியை கைது செய்ய வந்துள்ள கர்நாடக போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படும் என கொல்லம் காவல்துறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
பெங்களூரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தொடர்பு குண்டுவெடிப்புகளில் வங்கதேசத்தை சேர்ந்த நசீர் உள்ளிட்ட 2 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கேரளாவை சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானிக்கும் தொடர்பு இருப்பதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை இவ்வழக்கில் 31வது குற்றவாளியாக மதானியை சேர்த்து போலீசார் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கிற்கும், தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறிய மதானி தன்ணை கர்நாடக போலீசார் வேண்டுமென்றே இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்த்துள்ளதாகவும் முன்ஜாமீன் கேட்டு பெங்களூர் சி்ட்டி நீதிமன்றம், செசன்ஸ் நீதிமன்றம், ஐகோர்ட் ஆகியவற்றில் மனுதாக்கல் செய்தார்.
ஆனால் நீதிமன்றங்கள் அம்மனுக்களை தள்ளுபடி செய்து அவரை கைது செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து நேற்று பெங்களூர் டிஎஸ்பி சித்தராமைய்யா தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படையினர் கொச்சி வழியாக கொல்லம் வந்தனர். மதானியை கைது செய்வது குறித்து கொல்லம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்சிதாவுடன் ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து எஸ்பி ஹர்சிதா நிருபர்களிடம் கூறியதாவது,
கொல்லத்திற்கு மதானியை கைது செய்ய வந்துள்ள கர்நாடக போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். இதுகுறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முழு பாதுகாப்பு அளிக்கப்படு்ம். சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை. முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
கேரள மாநில உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் தற்போது விஜயவாடாவில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளதால் அவருடன் கலந்து காவல்துறை அதிகாரிகள் பேசிய பின்புதான் மதானி கைது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications