இனி சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம் பாடப்படுமாம்

தற்போது அதில் ஒரு முக்கிய நிகழ்வாக, இனிமேல் இலங்கையில், தேசதிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படும், தமிழில் பாடப்பட மாட்டாது என்ற முடிவை எடுத்துள்ளதாம் ராஜபக்சே அரசு.
தற்போது சிங்களத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. ஆனால் தற்போதுதான் ஒரே நாடாகி விட்டதே, இனியும் எதற்கு தமிழ் என்று பேசி வருகிறாராம் ராஜபக்சே. இதையடுத்து இனிமேல் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதத்தைப் பாடினால் போதும் என்று அவர் முடிவெடுத்துள்ளாராம்.
லண்டனுக்குப் போன ராஜபக்சேவுக்கு தமிழர்கள் கொடுத்த பிரமாதமான வரவேற்பினால் வெகுண்டு, வெந்து நொந்து போய் கொழும்புக்குத் தப்பி ஓடி வந்த வேகத்தில் இந்த தமிழ் தேசிய கீதத்திற்குத் தடை போட்டுள்ளார் ராஜபக்சே.
லண்டன் திரும்பிய பின்னர் அவர் அமைச்சரவையைக் கூட்டி எந்த நாட்டிலும் பல மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுவதில்லை. அப்படிஇருக்கையில் இலங்கையில் மட்டும் ஏன் இரு மொழிகளில் பாட வேண்டும் என்று கேட்டாராம்.
ராஜபக்சேவின் இந்தப் பேச்சுக்கு உடனே ஒத்து ஊதி ஆமோதித்தாராம் இனவெறி அமைச்சரான விமல் வீரவன்ச. அதேசமயம், இது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்று சற்றே தைரியமாக கூறியுள்ளனர் அமைச்சர்கள், வாசுதேச நாணயக்கார மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர்.
ஆனாலும் ராஜபக்சே சொல்லுக்கு அப்பீல் ஏது. எனவே அமைச்சரவை அவரது கூற்றை ஏற்றுக் கொண்டு விட்டதாம்.
இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த முக்கியமான முடிவை ராஜபக்சே அன்ட் கோ விவாதித்துக் கொண்டிருந்தபோது, வாய் மூடி, எதுவும் பேசாமல், கப்சிப்பென்று உட்கார்ந்திருந்தார்களாம் அமைச்சர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் தமிழர்களான டக்ளஸ் தேவானாந்தா, ஆறுமுகம் தொண்டமான், ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம் அத்தாவுல்லா ஆகியோர்.












Click it and Unblock the Notifications