ராடியாவுக்கு அரசு ரகசியங்களை தந்த அனந்த்குமார்: மத்திய அரசு விசாரிக்க முடிவு!

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாஜக பொதுச் செயலாளர் அனந்த்குமார் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது அவரது அலுவலகத் தகவல்களை நீரா ராடியாவிடம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து மத்திய அரசு விசாரணை நடத்தும். அலுவலக ரீதியிலான முடிவுகள், ராடியாவுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தால் அது நிச்சயம் தவறாகும். சாதாரண தவறு அல்ல, தேச துரோக செயலாகும்.
டிசம்பர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு லோக்சபா சபாநாயகர் மீரா குமார் ஏற்பாடு செய்துள்ளார். அதில், நாடாளுமன்றத்தில் நிலவி வரும் அமளியைப் போக்குவரத்து குறித்து விவாதிக்கப்படும்.
நாடாளுமன்றத்தை கிட்டத்தட்ட 22 நாட்கள் முடக்கி வைத்து விட்டது பாஜக. இது ஜனநாயக விரோத செயலாகும். அரசியல் உள்நோக்கத்துடன் கூடிய செயல் இது.
நாடாளுமன்றம் செயல்படாமல் போனதால் மத்திய அரசுக்கு ரூ. 33 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஜேபிசி விசாரணை தேவை என்று கோரி வருகின்றன எதிர்க்கட்சிகள். ஒருவேளை ஜேபிசி அமைக்கப்பட்டாலும் கூட அதில் இடம் பெறும் அளவுக்கு பல எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் போதிய பலம் இல்லை. ஜேபிசியில் இடம் பெற ஒரு அரசியல் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் குறைந்தது 17 உறுப்பினர்களாவது இருக்க வேண்டும் என்பது விதியாகும். இதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
பொதுக் கணக்குக் கமிட்டிக்கு நிறைய அதிகாரங்கள் உள்ளன. எனவே அதன் விசாரணையே போதுமானதாகும்.
கடந்த காலங்களில் ஜேபிசி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டபோதெல்லாம் எதுவுமே முடிவுக்கு வரவில்லை, பலன் தரவில்லை. இதன் காரணமாகத்தான் ஜேபிசி விசாரணையை ஏற்க காங்கிரஸ் மறுத்து வருகிறது. வேறு எந்தக் காரணமும் இதற்குப் பின்னால் இல்லை.
போபர்ஸ் பேர ஊழல் விவகாரத்தை ஜேபிசி விசாரித்தது. பங்குச் சந்தை ஊழல் விவகாரத்தை விசாரித்தது. கோலா நிறுவனத்திற்கு எதிரான விவகாரத்தை விசாரித்தது. ஆனால் எதிலுமே உரிய பலன் கிடைக்கவில்லை என்றார் நாராயணசாமி.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications