கேஸ்-மண்ணெண்ணெய் மானியத்தில் மாற்றம்: நீல்கேனி தலைமையில் கமிட்டி

ஏழை-எளிய மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலைக்கு கிடைப்பதற்காக மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. 2009-10-ம் ஆண்டுக்காக, சமையல் எரிவாயுக்காக ரூ.14 ஆயிரத்து 257 கோடியும், மண்ணெண்ணெக்காக 17 ஆயிரத்து 364 கோடியும் தற்போது மானியமாக வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கான உரத்துக்கு ரூ.53 ஆயிரம் கோடி மானியமாக வழங்கப்பட்டது.
ஆனால், அரசு வழங்கும் இந்த மானியத்தின் பயன்கள், உண்மையிலேயே பொது மக்களுக்கு நேரடியாகப் போய் சேருவது இல்லை என்றும், கலப்படம், கள்ள மார்க்கெட் மற்றும் கசிவு காரணமாக இழப்பு ஏற்படுவது போன்ற பல்வேறு புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து மானியம் வழங்கும் கொள்கையை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டது.
தனி கமிட்டி அமைப்பு
அதைத் தொடர்ந்து, மானியம் வழங்கும் கொள்கையை சீரமைப்பதற்காக, பல்வேறு அமைச்சகங்களை உள்ளடக்கிய சிறப்பு பணி கமிட்டி ஒன்றை மத்திய அரசு அமைத்து உள்ளது. இந்த கமிட்டி, மானியத்தின் பயன்கள் நேரடியாக மக்களைச் சென்று அடையும் விதத்தில் புதிய கொள்கையை உருவாக்குவது குறித்து 4 மாதங்களுக்குள் மத்திய அரசுக்கு சிபாரிசு அறிக்கையை தாக்கல் செய்யும்.
தனி நபர் சிறப்பு அடையாள அட்டை வழங்கும் ஆணையத்தின் தலைவரும், 'இன்போசிஸ்' நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான நந்தன் நீல்கேனி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கமிட்டியில் நிதி, உணவு, விவசாயம், பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் உரம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகங்களின் செயலாளர்கள் இடம் பெற்று உள்ளனர்.
முன்னோடி திட்டமாக...
இந்த கமிட்டியின் சிபாரிசுகளை, சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சகங்கள் முன்னோடி திட்டமாக அமல்படுத்தி, அதன் முடிவுகளும் இறுதி அறிக்கையில் சேர்க்கப்படும். இறுதி அறிக்கையை பரிசீலித்த பின், மானிய கொள்கையை மாற்றியமைப்பது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.
மத்திய நிதித்துறை அமைச்சக செய்தி குறிப்பு ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சட்டவிரோதமாக மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை பதுக்கி வைத்து இருக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுத்த மராட்டிய மாநில கூடுதல் ஆட்சியர் யஷ்வந்த் சோனவானே, உயிரோடு எரித்து கொல்லப்பட்ட 3 வாரத்தில், மண்எண்ணெய் மானியத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான கமிட்டியை மத்திய அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications