வரி குறைக்கப்படவில்லை... மானியமும் இல்லை: பெட்ரோல் -டீஸல் விலை உயர வாய்ப்பு?
டெல்லி: 2011-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் எண்ணெய்க்கான வரிகளும் குறைக்கப்படவில்லை, அதற்கான மானியமும் உயர்த்தப்படவில்லை. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் அபாயம் எழுந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 117 டாலராக உயர்ந்துள்ளது.
இதனால், எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோலுக்கு லிட்டருக்கு 2 ரூபாய் 25 காசுகளும், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.10 ரூபாய் 74 காசுகளும், மண் எண்ணெய்க்கு லிட்டருக்கு 21 ரூபாய் 60 காசுகளும், கியாசுக்கு சிலிண்டருக்கு 356 ரூபாயும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. நடப்பு நிதியாண்டில், மொத்தம் ரூ.76 ஆயிரத்து 559 கோடி நஷ்டம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தாமல், இந்த நஷ்டத்தை சரிக்கட்ட வேண்டுமானால், அப்பொருட்கள் மீதான சுங்க வரி மற்றும் உற்பத்தி வரி குறைக்கப்பட வேண்டும் என்று பெட்ரோலிய அமைச்சகம் பரிந்துரைத்தது. தற்போது, கச்சா எண்ணெய் மீது 5 சதவீத சுங்க வரியும், பெட்ரோல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு 14 ரூபாய் 35 காசுகளும், டீசலுக்கான உற்பத்தி வரி 4 ரூபாய் 60 காசுகளும் விதிக்கப்பட்டு வருகிறது.
பாராளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்த வரிகளை குறைப்பது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இதனால், பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், தற்போது பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருப்பதால், இப்போது விலையைக் கூட்டினால், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளியை சந்திக்க வேண்டி இருக்கும்.
பட்ஜெட் கூட்டத்தொடர், வருகிற 18-ந் தேதி முதல், 4 வாரங்களுக்கு இடைவெளி விடப்பட்டு, மீண்டும் கூடுகிறது. எனவே, அந்த இடைவெளியில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என்று தெரிகிறது. அல்லது தேர்தலுக்குப் பிறகு கண்டிப்பாக உயரும் என்கிறார்கள்.
இந்த விலை உயர்வு குறித்து, பொது பட்ஜெட்டுக்கு பிறகு, பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு (GoM) முடிவு எடுக்கும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி ஏற்கனவே கூறியுள்ளார். இந்தக் குழு 18-ந் தேதிக்கு பிறகு கூடி, பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்துவது பற்றி முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.
-
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டையே சமாளிக்க முடியல! இதுல அடுத்த அதிர்ச்சியா? தூக்கத்தை தொலைத்த மக்கள் -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு அச்சம்.. அதிகாலையிலேயே பெட்ரோல் பங்க்குகளில் அலைமோதும் மக்கள் -
அண்ணே டேங்க ஃபுல் பண்ணுங்க..நாளைக்கு கிடைக்குமோ? கிடைக்காதோ? சென்னை பெட்ரோல் பங்குகளில் செம கூட்டம்! -
புதுச்சேரியில் 25 லிட்டர் கேன்களில் பெட்ரோல்.. வில்லியனூர் பெட்ரோல் பங்குகளில் யார்னு பார்த்தீங்களா -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல்












Click it and Unblock the Notifications