ஹிட்லரை விட குரேஷி மோசம்: பிரதீபா பாட்டீலிடம் திமுக நிர்வாகி புகார்
நெல்லை: ஹிட்லரின் நடவடிக்கைகளை விட புதிய தலைமை தேர்தல் ஆணையரின் நடவடிக்கைகள் மோசமாக இருக்கின்றன என்று குடியரசுத் தலைவருக்கு பாளை மண்டல தலைவர் திமுகவை சேர்ந்த சுபா சீதாராமன் புகார் அனுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
இந்திய குடியரசுத் தலைவராகிய உங்களுக்கு குடிமக்களின் உரிமையை பாதுகாக்கும் பொறுப்பு அரசியல் சட்டம் மற்றும் பாராளுமன்றம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தை தேர்தல் மூலம் உறுதி செய்ய தேர்தல் ஆணையம் வழிவகை செய்கிறது. ஆனால் தமிழகத்தில் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையம் நடைமுறைக்கு ஒவ்வாத நிபந்தனைகளை விதிக்கிறது. போக்குவரத்து சாலைகளில் போலீஸ் அடிக்கடி சோதனைச் சாவடிகளை அமைத்து பயணிகளை கடுமையாக சோதிக்கின்றனர்.
கோயில், குடும்ப விழாக்களுக்கு சென்று வருவோரும் சோதனை என்ற பெயரில் தொல்லைக்கு ஆளாகின்றனர். அன்றாடம் பயன்படும் பால், உணவு பொருட்கள் மற்றும் ஜவுளிகளும், வணிகத்துக்கு கொண்டு செல்லும் பணமும் பறிமுதல் செய்யப்படுகிறது. கோழி, ஆடு மாடுகளையும் கூட விட்டு வைக்கவில்லை. அவற்றையும் தேர்தல் அதிகாரிகள் அடை காக்கின்றனர்.
தனியார் வீடுகள், கட்டிடங்களில் போலீஸ் உதவியுடன் தேர்தல் அதிகாரிகள் இரவு நேரங்களில் சோதனை என்ற பெயரில் அத்துமீறி செயல்படுகின்றனர். சாலையோர நினைவிடங்கள், கொடி கம்பங்கள் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன. திருமண மண்டங்களில் பொதுமக்களின் மங்கல நிகழ்ச்சிக்கு கூட மறுக்கப்படுகின்றன.
புதிய தலைமை தேர்தல் ஆணையரின் செயல்பாடு ஹி்ட்லரின் செயல்பாடை விட மோசமாக உள்ளது. எனவே குடியரசுத் தலைவராகிய நீங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஜனநாயக விரோதமாக செயல்படும் மத்திய தேர்தல் ஆணையத்தை நேரில் ஆஜராக சொல்லி மனித உரிமை மீறல்களை கைவிட்டு அரசியல் சாசனம் வழங்கிய வரம்பிற்கு உட்பட்டு தேர்தலை நடத்த அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications