நெல்லை ரயில் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு: 4 பேர் சிக்கினர்
நெல்லை: நெல்லை ரயில் நிலையத்தில் சென்னையில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 4 பேர் சிக்கினர்.
தென்னக ரயில்வே மூலம் இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் கோடை கால விடுமுறையை முன்னிட்டு வருகிற ஜூன் மாதம் 20-ம் தேதி வரை அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. முன்பதிவுகள் அனைத்தும் தற்போது வெயிட்டிங் லிஸ்டில் தான் செல்கிறது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில் அறிமுகப்படுத்தினாலும் மறுநாளே அனைத்து டிக்கெட்டுகளும் காலியாகி விடுகின்றன. இதனால் ஏராளமான பொதுமக்கள் ரயில் நிலைய அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர்.
ரயில் நிலைய ஊழியர்களும், சில புரோக்கர்களும் சேர்ந்து அனைத்து டிக்கெட்டுகளையும் கூடுதல் விலைக்கு விற்க முன்பதிவு செய்து விடுவதாகவும், புரோக்கர்களிடம் கூடுதல் பணம் கொடுத்தால் அவரவர் வயதுக்கு ஏற்ப வேறு பெயர்களில் டிக்கெட் வழங்கப்படுவதாகவும் புகார் கூறப்பட்டன. இதை தடுக்க தமிழகம் முழுவதும் ரயில்வே போலீசார் சோதனை நடத்த முடிவு செய்தனர். சென்னையில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை நெல்லை வந்தனர். அவர்கள் பயணிகள் போல் நெல்லை முன்பதிவு கவுண்டர்கள் முன் நின்று சிறிது நேரம் கண்காணித்தனர்.
நெல்லை சந்திப்பு மேற்கு வாசல் கவுண்டர், மெயின் கவுண்டர், பாளை வார்டு அலுவலகத்தில் உள்ள ரிசர்வேஷசன் கவுண்டர் முன் ரகசியமாக கண்காணித்தனர். திடீர் என்று அவர்கள் ரயில்வே டிக்கெட் கவுண்டரில் கூடுதல் பணம் உள்ளதா என அதிரடி சோதனை நடத்தினர். மேலும் அனைத்து கவுண்டர்கள் முன்பும் வரிசையில் நின்ற ஒருவரையும் விடாமல் அதிரடி சோதனை நடத்தினர். உறவினர்களுக்கு டிக்கெட் எடுக்க வந்தவர்களிடம் அவர்களின் போன் எண் கேட்டு உண்மையா என்று விசாரித்தனர். டிக்கெட் எடுக்க வந்த உள்ளூர் போலீசார் உள்பட சில அரசு அதிகாரிகளையும் சோதனை செய்தனர். சோதனையில் கூடுதலான பணம் எதுவும் சிக்கவில்லை.
நெல்லை சந்திப்பில் நடந்த சோதனையில் மட்டும் சந்தேகப்படும் படியாக டிக்கெட் எடுத்த 20 பேரை தனியாக அழைத்துச் சென்று சரமாரியாக கேள்வி கேட்டு திணறடித்தனர். இதில் புரோக்கர்கள் இல்லை என்று தெரிந்த 16 பேர் விடுவிக்கப்பட்டனர். 4 பேர் புரோக்கர்களாக இருப்பர் என்று சந்தேகப்பட்டதால் முன்பதிவு விண்ணப்பத்தில் உள்ள கையெழுத்தை சோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications