ஒரே நாளில் சென்னையில் 16 செ.மீ., மழை கொட்டியது-இன்றும் மழை பெய்யும் என எச்சரிப்பு
சென்னை: சென்னையில் நேற்றுமுன்தினம் மட்டும் 16 செ.மீ மழைக் கொட்டித் தீர்த்தது. மழைநீர் ஆங்காங்கே தேங்கி நின்றதால், சென்னை மக்கள் செய்வதறியது திண்டாடினர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை நடந்துவரும் நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்றுமுன்தினம் மாலை துவங்கிய மழை இரவு முழுவதும் நீடித்தது. வங்க கடலில் ஏற்பட்ட வெப்பச் சலனம் காரணமாக பெய்த இந்த திடீர் மழையால், ஆங்காங்கே மழைநீர் தேங்கி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதிகபட்சமாக, மீனம்பாக்கத்தில் 16.3 செ.மீட்டரும், டி.ஜி.பி அலுவலம் அருகே 16 செ.மீ., நுங்கபாக்கத்தில் 15 செ.மீ., மழையும் பெய்தது. சென்னை மாநகராட்சி அலுவலகம், சென்ட்ரல் ரயில் நிலையம், அயனாவரம், கொளத்தூர், பெரம்பூர், ஓட்டேரி, திருவான்மியூர், அடையாறு, கோயம்பேடு 100 அடி சாலை, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் அதிகளவில் தேங்கியதால், மக்கள் நடமாட முடியாமல் திணறினர்.
இருசக்கர வாகனங்கள் முதல் பஸ்கள் வரை அனைத்து வாகனங்களும் ஊர்ந்து சென்றதால், அதிகளவிலான காலதாமதம் ஏற்பட்டது. மழைநீர் தேங்கிய இடங்களுக்கு விரைந்த மாநகராட்சி பணியாளர்கள் தேங்கி கிடந்த நீரை மோட்டர்களின் உதவியுடன் அப்புறப்படுத்தினர். இதனால், சற்று சகஜநிலை திரும்பியது.
இன்றும் மழைப் பெய்யும்:
தென்மேற்கு பருவ மழை ஆந்திராவில் வலுவடைந்துள்ளதால், அடுத்த 24 மணிநேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில், மாலையிலோ அல்லது இரவிலோ மழைப் பெய்யலாம் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications