நில அபகரிப்பு: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முன்னாள் பாமக எம்.எல்.ஏ. கைது

கரூர் அருகே பரமத்தி வேலூரில் 1950ம் வருடம் சாமியப்ப செட்டியார் என்பவர் 17 உறுப்பினர்களைக் கொண்ட காந்திஜி நினைவு மன்றம் என்ற அமைப்பை தொடங்கினார். இந்த மன்றத்திற்கு 1.73 ஏக்கர் நிலத்தை வாங்கி டிரஸ்ட் தொடங்கினார். இந்த இடம் காந்தி பெயரில் உள்ளது. டிரஸ்ட் உறுப்பினர்கள் 17 பேரும் 1976ம் வருடத்திற்குள்ளாகவே இறந்துவிட்டனர்.
அதன் பின்னர் இந்த நிலம் பராமரிப்பின்றி கிடந்தது. இந் நிலையில் 2006ம் ஆண்டு கபிலர்மலை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவான டாக்டர் நெடுஞ்செழியனும் பேரூராட்சி மன்ற தலைவராக இருந்த பொன்னிமணி, வழக்கறிஞர் காமராஜர் ஆகியோர் போலி பத்திரங்கள் தயார் செய்து இந்த நிலத்தை தங்கள் பெயருக்கு எழுதிக் கொண்டதாகத் தெரிகிறது.
இந் நிலையில் இந்த இடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு மின் இணைப்பு வாங்குவதற்காக, இந்த இடம் தனக்கு சொந்தமானது என்று நெடுஞ்செழியன் ஆவணங்களையும் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக நெடுஞ்செழியன் மீது பொத்தனூர் மக்கள் குடிமை இயத்தை சேர்ந்த மதியழகன் என்பவர் போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார் இன்று அதிகாலை 3 மணிக்கு நெடுஞ்செழியன் வீட்டுக்கு சென்றனர்.
அங்கு அசந்து தூங்கிக் கொண்டிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். இதே வழக்கில் டவுன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பொன்னிமணி, வழக்கறிஞர் காமராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுஞ்செழியன் மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தார். அன்மையில் தான் நெடுஞ்செழியன் பாமகவில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட மூவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications