சென்னை எலியட்ஸ் பீச்சில் விளையாடிய 3 என்ஜினியர்கள் கடலில் மூழ்கி பலி
சென்னை: சென்னை எலியட்ஸ் கடற்கரையில் விளையாடியபோது கடலில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற பெங்களூரைச் சேர்ந்த 3 என்ஜினியர்கள் கடலில் மூழ்கி பலியாகினர்.
சென்னை துரைபாக்கம் பகுதியில் உள்ள டிசிஎஸ் ஐ.டி. கம்பெனியில் பணிபுரியும் 10 என்ஜினியர்கள் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் பந்து வீசி விளையாடினர். ஜாலியாக விளையாடி கொண்டிருந்த போது பந்து கடலில் விழுந்தது.
அதை எடுக்க 3 பேர் கடலில் இறங்கினர். பந்து கடல் அலையில் ஆழமான பகுதிக்கு சென்றது. இதனையடுத்து 3 பேரும் பந்தை நோக்கி ஆழமான பகுதிக்கு சென்றனர். அப்போது வந்த பெரிய அலையில் அந்த 3 பேரையும் கடலுக்குள் இழுத்து சென்றது. இதனை கண்ட மற்ற 7 பேரும் அவர்களை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இறுதியில் கடலில் மூழ்கி 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன் உத்தரவின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். விசாரணையில் கடலில் மூழ்கி இறந்தவர்கள் பெங்களூர் காய்த்ரி நகரைச் சேர்ந்த பிரவீன்(21), சென்ராவ் பகுதியைச் சேர்ந்த சக்தி(21) மற்றும் ஆனந்த் பூஷன்(21) எனத் தெரிய வந்தது.
கரை ஒதுங்கிய சக்தி மற்றும் பிரவீன் ஆகியோரின் உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனந்த் பூஷனின் உடல் இன்னும் கிடைக்கவில்லை.
கடற்கரையில் 10 பேரும் விளையாட ஆரம்பித்த போதே கடற்கரை பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசார் அங்கிருந்து அவர்களை விரட்டியுள்ளனர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அங்கேயே விளையாடியதால் கடலில் சிக்கி 3 பேர் பரிதாபமாக இறந்துள்ளதாக தெரிகிறது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications