மாநில மொழிப் பத்திரிகைகளுக்கு நல்ல வரவேற்பு... ஆங்கில இதழ்கள் தேக்கம்!

அச்சு ஊடகத்துறையின் நிலை மற்றும் எதிர்காலம் குறித்து கேபிஎம்ஜி நிறுவனம் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது.
இதில், பிராந்திய மொழிப் பத்திரிகைகள் சர்க்குலேஷன், வாசகர் எண்ணிக்கை என பல வகையிலும் வளர்ந்து வருகின்றன. 2010-15 காலகட்டத்தில் இந்தி போன்ற மாநில மொழி பத்திரிகைகள் வளர்ச்சி 10.8 முதல் 12.3 சதவீதமா இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் ஆங்கில மொழிப் பத்திரிகைகள் 7.5 சதவீத வளர்ச்சி கண்டாலே பெரிய விஷயம்தான்.
வருவாய் ஈட்டுவதிலும் பிராந்திய மொழிப் பத்திரிகைகளே முதலிடம் வகிக்கின்றன. மொத்த வருவாயில் 60 சதவீதம் வரை இந்தி உள்ளிட்ட மாநில மொழிப் பத்திரிகைகள் பெறுகின்றன. வரும் காலத்தில் இது 64 சதவீதமாக உயரும்.
பிராந்திய மொழிப் பத்திரிகைகளின் இந்த வளர்ச்சிக்குக் காரணம், வாசகர்களுடன் அவை நெருக்கமாக இருப்பதுதான். அந்ததந்த மாநில மக்கள் தங்கள் மொழிப் பத்திரிகைகளுக்குதான் முக்கியத்துவம் தருகிறார்கள். ஆங்கிலப் பத்திரிகைகள் வாங்குவதில் அவர்களுக்கு ஆர்வமில்லை. இன்னொன்று, உள்ளூர் பத்திரிகைகள் அந்த மாநில செய்திகளை விரிவாக வெளியிடுகின்றன. ஆங்கிலப் பத்திரிகைகளோ சில வரிகளில் முடித்துவிடுகின்றன.
அதேபோல, கிராமப் புறங்களில் ஆங்கிலப் பத்திரிகைகள் கவனம் செலுத்துவதில்லை. இதனால்தான் அவை தேக்க நிலையில் உள்ளன," என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜாக்ரன் பிரகாஷன் சிஇஓ சஞ்சய் குப்தா, "ஆங்கிலப் பத்திரிகை படிப்பவர் எண்ணிக்கை ஓரளவு கூடினாலும், பெரும்பாலானோர் தங்கள் மொழிப் பத்திரிகையைப் படிக்கவே விரும்புகின்றனர். காரணம், பாரம்பரிய உணர்வு, மொழிப் பற்று. இதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மாநில மொழிப் பத்திரிகைகள்," என்றார்.
டைம்ஸ் ஆப் இந்தியா குழும தலைவர் பாஸ்கர் தாஸ் கூறுகையில், "நிகழ்வுகளை வேகமாகத் தரும் தன்மையை செய்தித் தாள்கள் இழந்துவிட்டன என்பதுதான் உண்மை. காரணம் செய்தித் தாள்கள் ஒருமுறை வெளியாகிவிட்டால், அடுத்த நாள் வரை காத்திருக்க வேண்டும். எனவே, உடனுக்குடன் செய்திகளை அப்டேட் செய்யும் வகையில் புதிய வழி காண வேண்டும்," என்றார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications