மலேசியாவுக்கு ஹெராயின் கடத்தல்- ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர் உள்பட 6 பேர் கைது
சென்னை: சென்னையிலிருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் ரூ. ஆறரை கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை கடத்த முயன்ற ஒரு பெண் உள்ளிட்ட 5 பேரையும், அவர்களுக்கு உதவிய ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியரையும் வருவாய் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து மற்றும் சரக்கு வாகனத்தையும் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். சென்னை விமான நிலைய வரலாற்றில், போதைப் பொருள் கடத்தலுக்காக விமான நிறுவனம் ஒன்றின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவுக்கு விமானம் மூலம் போதைப் பொருட்களைக் கடத்த முயற்சி நடப்பதாக வருவாய் புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று நள்ளிரவு 1 மணியளவில் கோலாலம்பூருக்குப் புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகளை வருவாய் புலனாய்வுப் பிரிவினர் ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது சத்தியா என்ற பெண்ணும், முகம்மது மசூர், அப்துல் காதிர் ஆகியோர் விமான நிலையம் வந்தனர். உரிய பரிசோதனைகளை முடித்த பின்னர் அவர்கள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பேருந்தில் ஏறி அமர்ந்தனர். பேருந்து விமானத்தின் அருகே சென்று நின்றது. இதையடுத்து இறங்கிய இந்த மூவரிடமும், பேருந்தின் ஓட்டுனரான சென்னை வண்டலூரைச் சேர்ந்த பாலகுமார் என்பவர் ஒரு பார்சலைக் கொடுத்தார்.
இதையடுத்து அவர்கள் நான்கு பேரையும் வருவாய் புலனாய்வுப் பிரிவினர் வளைத்துப் பிடித்தனர். அந்த பார்சலை வாங்கிப் பார்த்தபோது அதில் ஹெராயின் இருந்தது தெரிய வந்தது. அதன் எடை 3 கிலோவாகும். அதன் சர்வதேச மதிப்பு ரூ. ஆறரை கோடியாகும்.
அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் ஜாகிர் உசேன் உள்ளிட்ட மேலும் 2 பேர் சிக்கினர்.
பின்னர் அந்த பேருந்தையும், சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர் அதிகாரிகள். இவர்களுக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளது என்பது குறித்து வருவாய் புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications