பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், சாட்சிகளைக் கலைக்கக் கூடாது- கனிமொழிக்கு நிபந்தனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சாட்சிகளைக் கலைக்கக் கூடாது, விசாரணைக்கு தவறாமல் ஆஜராக வேண்டும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் கனிமொழிக்கு விதிக்கப்பட்டுளளது.
2ஜி வழக்கில் கைதாகி கடந்த 6 மாத காலமாக சிறையில் அடைபட்டிருந்த கனிமொழியை ஜாமீனில் விடுவிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
அவருக்கு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சாட்சிகளைக் கலைக்க முற்படக் கூடாது. சாட்சிகளைக் கலைக்க முற்பட்டால் அவரது ஜாமீன் தானாகவே ரத்தாகி விடும்.
விசாரணைக்கு தவறாமல் ஆஜராக வேண்டும். பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள இரு நபர் ஜாமீனில் தற்போது கனி்மொழி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications