அடுத்ததாக கருப்பு பண விவகாரத்தை கையில் எடுத்த சாமி.. சிபிஐ இயக்குனருடன் சந்திப்பு!
டெல்லி: வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி சிபிஐ இயக்குனர் ஏ.பி. சிங்கை நேரில் சந்தித்து ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி மனு கொடுத்தார்.
தனது புகார் மனுவில், வெளி நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்தவர்கள் இங்கு வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பு செய்து வருகின்றனர். எனவே, இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சந்திப்பு குறித்து சாமி நிருபர்களிடம் பேசுகையில், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் தொடர்பான புகார் மனுவுடன் ஏ.பி. சிங்கை நான் சந்தித்தேன். எனது மனு குறித்து 15 நாள்களில் முடிவெடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.
சமீபத்தில் வருமான வரித்துறையின் நேரடி வரிகள் பிரிவு (Central Board of Direct Taxes) ஜெர்மன் நாட்டு வங்கிகளிடம் இருந்து தங்களுக்குக் கிடைத்த 18 பேரின் பெயர்களை சிபிஐயிடம் கொடுத்துள்ளது. ஆனால், ஒருவர் தவிர மற்ற 17 பேர் மீதும் எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்று சிபிஐ பதில் தந்துள்ளது.
அதே நேரத்தில் ஜெர்மன் வங்கிகளில் சட்ட விரோதமாக கணக்கு வைத்திருந்த இந்த 18 பேரிடமிருந்தும் அபராதத் தொகையாக ரூ. 24.66 கோடியை மத்திய அரசு வசூலித்துள்ளது என்றார் சாமி.
இந்த சந்திப்பு குறித்து சிபிஐ செய்தித் தொடர்பாளர் தாரிணி மிஸ்ரா கூறுகையில், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைக் குழுவின் தலைவராக உள்ள சுப்பிரமணிய சாமி ஒரு புகார் மனுவுடன் ஏ.பி. சிங்கை சந்தித்தார். அவரது புகார் பரிசீலிக்கப்படும் என்றும், அது சிபிஐயின் வரம்புக்குள் வருமானால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏ.பி. சிங் உறுதியளித்தார் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications