தலைமைச் செயலக ஊழல் விசாரணைக் கமிஷன்- நீதிபதி தங்கராஜ் திடீரல் விலகல்
சென்னை: கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளில் நடந்த ஊழல்குறித்து விசாரிக்க ஜெயலலிதா அரசு அமைத்த விசாரணைக் கமிஷனின் தலைவரான நீதிபதி தங்கராஜ் திடீரென அப்பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டு விட்டார்.
கடந்த திமுக ஆட்சியின்போது பிரமாண்டமான புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை கட்டப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதை மூடி விட்டது. மேலும் இதன் கட்டுமானப் பணியில் பெருமளவில் ஊழல் நடந்திருப்பதாக கூறிய அரசு இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தங்கராஜ் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை அமைத்தது. இந்தக் கமிஷன் 3 மாதத்திற்குள் தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இதற்கிடையே தங்கராஜ் நியமனத்தை எதிர்த்து விஜயலட்சுமி என்ற திமுக வக்கீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் தங்கராஜ் தற்போது தனது பதவியிலிருந்து விலகி விட்டார். இந்தத் தகவலை அரசு வக்கீல் இன்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தங்கராஜின் விலகலுக்கான காரணம் தெரியில்லை.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications