திமுக முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி மேலும் ஒரு வழக்கில் கைது!
சென்னை: புழல் சிறையில் உள்ள திமுகவின் முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி மேலும் ஒரு நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
2006-ம் ஆண்டு காணாமல் போன கே.வி.கே.குப்பத்தை சேர்ந்த மீனவர் செல்லத்துரை என்பவரை கொலை செய்த வழக்கு, வேலு என்ற மீனவர் மாயமான வழக்கு, திருவொற்றியூர் போலீஸ் நிலையம் முன்பு போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்ற குற்றவாளிகளுக்கு ஆதரவாக மறியல் செய்த வழக்கு, சினிமா சண்டை நடிகர் பரணிகுமார் என்பவரை தாக்கிய வழக்குகளில் முன்னாள் மீன் வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 25.9.2011 அன்று திருவொற்றியூரை சேர்ந்த ஜெயலட்சுமி என்ற பெண் கொடுத்த நிலமோசடி வழக்கிலும் கே.பி.பி.சாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
அவர் மீது நிலமோசடி வழக்கு தொடரப்பட்டுள்ள தகவல் புழல் சிறையில் உள்ள கே.பி.பி.சாமிக்கு தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரை திருவொற்றியூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், கே.பி.பி.சாமியை 30-ந் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
அதே நேரத்தில் இந்த வழக்கில் கே.பி.பி.சாமி சார்பில் அவரது வக்கீல்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற ஜனவரி 19-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
இதனையடுத்து முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி புழல் சிறைக்கே கொண்டு செல்லப்பட்டார்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications