பாலமேடு ஜல்லிக்கட்டில் காளைகள் அடக்க முயன்ற 20 பேர் படுகாயம்
மதுரை: பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டி 20 பேர் படுகாயமடைந்தனர்.
நேற்று முன்தினம் மதுரை அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டில் உள்ள மஞ்சள்மலை ஆற்றுத்திடலிலும் ஜல்லிக்கட்டு நடந்தது.
ஜல்லிக்கட்டை காண அதிகாலை முதலே பார்வையாளர்கள் குவியத் தொடங்கினர். ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்னதாக மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் ஜல்லிக்கட்டு விதிமுறைகளை எடுத்து கூறினார். அவர் பேசுகையில், மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவுப்படி நிபந்தனைகளுக்குட்பட்டு இந்த ஜல்லிக்கட்டு நடக்கிறது. பல்வேறு சிரமங்களுக்கிடையே இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. எனவே எந்த சூழ்நிலையிலும், எந்த விதத்திலும் மாடுகளை துன்புறுத்தக் கூடாது. வாலைப் பிடித்து மாடுகளை அடக்க முயற்சிக்க கூடாது. விதிகளை மீறி யாரும் செயல்பட்டால் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்' என்றார்.
காலை 9.45 மணியளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. முதலில் கோவில்களுக்கு சொந்தமான காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மரியாதை நிமித்தமாக அந்த காளைகளை யாரும் பிடிக்கவில்லை.
அதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் அடக்க முயன்றனர்.
மாடுகளை பிடித்த வீரர்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன. பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
காளைகளை அடக்க முயன்ற 20 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் மிக பலத்த காயமடைந்த 8 பேர் ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications