சிவகங்கையில் அடகுக் கடையை உடைத்து 200 பவுன் நகை கொள்ளை
சிவகங்கை: சிவகங்கையில் அடகுக் கடை பூட்டை உடைத்து 200 சவரன் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், வாணியங்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பழம்பதி (72). இந்த பகுதியில் நகை அடகுக் கடை நடத்தி வருகின்றார். வழக்கம் போல் இன்று காலை கடையை திறக்க வந்த பழம்பதி ஷட்டர் பாதி திறந்த நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஷட்டரைத் திறந்து கடைக்குள் சென்று பார்த்தபோது இரும்பு பெட்டகம் உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 200 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையின் முன்பு இருந்த அலாரம் பழுதடைந்த நிலையில் இருந்ததால் ஷட்டர் உடைக்கப்பட்டபோது அபாய ஒலி எழவில்லை என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications