ஒரு ஆம்லெட்டுக்காக புரோட்டாக் கடையை சூறையாடிய 3 ஏட்டையாக்கள் டிரான்ஸ்பர்!
கோவில்பட்டி: கோவில்பட்டியில் பரோட்டா கடையில் ஆம்லெட்டுக்காக ஏற்பட்ட தகராறில் 3 ஏட்டுகள் அதிரடியாக மாற்றப்பட்டனர்.
கோவில்பட்டியில் கடந்த 29ம் தேதி செண்பகவல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்ததையொட்டி நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில பரோட்டா கடைகள், டீக்கடைகள் மட்டுமே திறந்திருந்தன.
இந்நிலையில் அன்றிரவு பழைய பேருந்து நிலையம் பகுதியில் ரவி என்பவரின் பரோட்டா கடைக்கு எஸ்பி சிஐடி தனிப்பிரிவு ஏட்டு முத்துராஜ் என்பவர் வந்து தனக்கு ஆம்லெட் போட்டு தரும்படி கேட்டுள்ளார். அதற்கு கடைக்காரர் ரவி கூட்டமாக இருக்கிறது, கொஞ்சம் பொறுங்கள் என்று கூறினாராம்.
இது ஏட்டுக்கு கோபத்தை ஏற்படுத்தவே அவர் பழைய பேருந்து நிலையம் சென்று அங்கு பணியில் இருந்த புறக்காவல் நிலைய போலீசாரிடம் நடந்ததை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அங்கிருந்த 2 ஏட்டுகள் ரவி கடைக்கு சென்று போக்குவரத்துக்கு இடையூறாக கடைக்கு வெளியே இப்படியா சேர், டேபிள்களை போடுவது, அதை அகற்றுங்கள் என்று அவர்கள் பங்குக்கு மிரட்டியுள்ளனர்.
இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கடையில் இருந்த இட்லி மாவு மற்றும் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. போலீசாரின் இந்த நடவடிக்கை குறித்து கொதித்தெழுந்த வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று முன்தினம் நெல்லை சரக டிஐஜி வரதராஜுவை சந்தித்து மனு அளித்தனர்.
அவர் விசாரணை நடத்தி தனிப்பிரிவு ஏட்டு முத்துராஜ், மேற்கு காவல் நிலைய ஏட்டுகள் கணேசமுருகன், துரைப்பாண்டி ஆகிய மூவரையும் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்ற உத்தரவிட்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications