விதிமீறிய கட்டடங்கள்: 3 ஆண்டு சிறை ரூ. 10 லட்சம் அபராதம் - தமிழக அரசு முடிவு
சென்னை: விதிமீறிய கட்டடங்கள் தொடர்பான நீதிபதி மோகன் கமிட்டியின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை தியாகராய நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு அக்டோபர் 31 ம் நாள் சீல் வைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தமிழக அரசின் நகர்புற வளர்ச்சித்துறை செயலாளர் மணீந்தர் ரெட்டி பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கட்டட விதிமீறல் தொடர்பாக நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி மோகன் கமிட்டியின் அறிக்கையை அரசு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோகன் கமிட்டியின் பரிந்துரைப்படி, விதிகளை மீறும் கட்டட உரிமையாளர்களுக்கு 3 மாதம் முதல் 3 ஆண்டுவரை சிறைத் தண்டனையும் 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது. மேலும் கட்டட ஒப்பந்ததாரர், கட்டுமான நிறுவனம் மற்றும் சர்வேயர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் 2007ஆம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடங்களுக்கு விதிவிலக்கு அளிக்கலாம் என நிதிபதி மோகன் குழு பரிந்துரைத்திருப்பதாகவும் அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் சீல் வைக்கப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு வரும் 7ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications