புதுச்சேரியில் மவுன சாமியார் ஆட்சி நடக்கிறது: வைத்திலிங்கம் குற்றச்சாட்டு
புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. இங்கு மவுன சாமியார் ஆட்சி நடக்கின்றது என்று அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கை சீர்செய்ய முதல்வர் ரங்கசாமி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகள் துணை நிலை ஆளுநரின் செயலாளர் உதிப்திரேவிடம் மனு அளித்தனர்.
பின்னர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
புதுச்சேரியில் வியாபாரிகள் மீது ரவுடிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறித்து அரசிடம் பல முறை புகார் தெரிவித்தும் உரிய நவடிக்கை எடுக்கப்படவில்லை. குறிப்பாக நூறடி ரோட்டில் வியாபாரி மீது தாக்குதல், ஏனாமில் கொலை ஆகியவை நடந்துள்ளது.
புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. மாநில அரசு அனைத்து சம்பவங்களைப் பார்த்து வாய்மூடி மவுனமாக உள்ளது. இங்கு சட்டம்-ஒழுங்கு கவலையளிக்கும் வகையில் இருப்பதற்கு முதல்வர் ரங்கசாமி அரசு தான் காரணம். புதுச்சேரியில் மவுன சாமியார் ஆட்சி நடக்கின்றது.
சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு வருவதைத் தடுக்கும் நடவடிக்கையில் முதல்வர் ஈடுபட்டதற்கான எந்தவித அறிகுறியும் தெரியவில்லை.
போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் சட்டம்-ஒழுங்கு கெட்டுள்ளது. எனவே, உடனே போலீசாரின் ஆலோசனை கூட்டத்தை நடத்த ஆளுநர் ஏற்பாடு செய்ய வேண்டும் என மனு கொடுத்துள்ளோம். இந்தப் புகார் மனுவின் நகல் பிரதமருக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications