கூடங்குளம் காவல்துறையினர் அதிரடி மாற்றம்-போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை?
திருநெல்வேலி: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சுமூகமான சூழலை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து முத்துநாயகம் தலைமையில் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது.
இதேபோல் தமிழ்நாடு அரசும் கூடங்குளம் எதிர்ப்புக் குழுவினரை உள்ளடக்கிய ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது.
இருதரப்புக்கும் இடையே மூன்று சுற்றுப் பேச்சுக்கள் நடைபெற்றன. 4-வது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு சென்ற கூடங்குளம் எதிர்ப்புக் குழுவினரை இந்து முன்னணியினர் தாக்கியதால் பேச்சுவார்த்தை முறிந்தது.
இனி மத்திய குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று கூடங்குளம் போராட்டக் குழுவினர் அறிவித்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு, கூடங்குளம் தொடர்பாக ஆராய ஒரு புதிய வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தது.
இது போராட்டக்காரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் போராட்டக் குழுவுடன் பேச்சு நடத்தி ஒரு சுமூக சூழலை உருவாக்க காவல்துறையிலும் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கூடங்குளம் போலீசார் போராட்டக் குழுவினர் மீது இதுவரை 156 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இவை திரும்பப் பெற முடியாத வழக்குகளாகும்.
இந்நிலையில்; கூடங்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் துணை கண்காணிப்பாளருக்கு பதிலாக, அருகிலுள்ள கிராமங்களை சொந்த ஊராகக் கொண்ட அதிகாரிகள், புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கூடங்குளம் இன்ஸ்பெக்டர் சங்கமேஸ்வரனுக்கு பதிலாக, கூடங்குளம் அருகிலுள்ள பழவூர், யாக்குவாபுரத்தைச் சேர்ந்த, இன்ஸ்பெக்டர் ராஜ்பாலும்; வள்ளியூர் கூடுதல் எஸ்.பி., விஜயகுமாருக்கு பதிலாக, கூட்டப்புளி அருகிலுள்ள கண்ணன்குளத்தைச் சேர்ந்த, வள்ளியூர் துணை கோட்ட போலீஸ் துணை கண்காணிப்பாளராக, ஸ்டான்லி ஜோன்ஸ் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அணு உலை எதிர்ப்பு போராட்டம் மற்றும் அதில் ஈடுபடுவோருக்கு எந்த சிக்கலும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு உத்தரவின் பேரில், காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
புதிய அதிகாரிகளின் சொந்த ஊரைச் சேர்ந்த பலர் போராட்டத்தில் ஈடுபடுவதால், அவர்களிடமும், உள்ளூர் பாதிரியார்களிடமும் பேச்சு நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தமிழக அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications