அமைச்சர் நாரயணசாமி மன்னிப்பு கேட்கவேண்டும்: உதயகுமார் வக்கீல் நோட்டீஸ்
நெல்லை: நற் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய மத்திய அமைச்சர் நாரயணசாமி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டக்குழு தலைவர் உதயகுமார், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி கடந்த 6 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இடிந்தகரையில் உண்ணாவிரதம், சாலை மறியல், மொட்டை அடிக்கும் போராட்டம் என பல கட்டங்களாக போராட்டம் நடை பெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு வெளிநாட்டு நிதியாக ரூ.1 1/2 கோடி வந்துள்ளது என்பதற்கான ஆதாரம் உள்ளது என்று கூறினார்.
இதனையடுத்து மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் சார்பில் அவரது வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,
மன்னிப்பு கோரவேண்டும்
எனது கட்சிக்காரர் நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு வெளிநாட்டில் இருந்து ரூ.1 1/2 கோடி பணம் வந்துள்ளது என்று கூறி அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளீர்கள்.
அதோடு மட்டுமல்லாமல் பொதுநலனுக்கு எதிராகவும் செயல்பட்டுள்ளீர்கள். எனவே, இந்த நோட்டீஸ் கிடைத்த 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் மீது சிவில் மற்றும் குற்ற வழக்கு தொடரப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications