இஸ்ரேலை குறிவைத்து ஈரான் வெடிகுண்டு தாக்குதல் நடத்துகிறது: ஐ.நா.விடம் புகார்
Subscribe to Oneindia Tamil

இஸ்ரேலுக்கான ஐ.நா.சபையின் நிரந்தர பிரதிநிதி ரோன் புரோசர், ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கி மூனுக்கு எழுதியுள்ள் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் எங்கள் தூதரக அதிகாரி வாகனத்தில் நடந்த குண்டு வெடிப்புபோல், லெபனான், தாய்லாந்து, பல்கேரியா, ஜியார்ஜியா, அஜர்பைஜான் ஆகிய நாடுகளிலும் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஈரானும், அதன் ஆதரவு பெற்ற ஹெஜ்புல்லா தீவிரவாத இயக்கமும்தான் காரணம்.
சம்பவ இடங்களிலிருந்து ஈரானியர்களின் கைரேகை ஆதாரமாக கிடைத்து உள்ளன. ஈரானின் நடவடிக்கைகளால் பல நாடுகளுக்கு, அந்த நாட்டு அப்பாவி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.
டெல்லி, திபிலிசி, பாங்காக் நகரங்களில் நடந்த குண்டு வெடிப்புக்காக ஈரானை ஐ.நா. பாதுகாப்பு சபை உடனடியாக கண்டிக்க வேண்டும்'' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications