திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி தொடக்கம்
திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோயிலின் பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி இன்று காலை தொடங்கியுள்ளது.
உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட எம்.வி. நாயர் தலைமையிலான குழு, எம்.என். கிருஷ்ணன் தலைமையிலான குழு முன்னிலையில் பொக்கிஷங்களை மதிப்பிட்டு ஆவணப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கேரள அரசு பிரதிநிதிகள், திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரும் இக்குழுக்களில் இடம்பெறுள்ளனர்.
திருவனந்தபுரம் கோயில் உள்ள பாதாள அறைகளில் லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொக்கிஷங்கள் இருப்பதாக தெரியவந்தது.
பணக்கார சாமி என்றழைக்கப்பட்ட திருப்பதியை பின்னுக்கு தள்ளி உலகிலேயே பணக்கார சாமி என்ற அதிரடிப் பெருமை திருவனந்தபுரம் கோயிலுக்குக் கிடைத்தது.
பின்னணி
திருவனந்தபுரம் கோயில் பொக்கிஷங்களை வெளிப்படுத்த வேண்டும் என்ரு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சுந்தரராஜன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஜூலையில் பாதாள அறைகளைத் திறக்க குழு அமைத்தது. இதையடுத்து நவீன கருவிகளின் உதவியுடன் திருவனந்தபுரம் கோயிலின் பாதாள அறைகள் திறக்கப்பட்டு அவை வீடியோ படமாக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இருப்பினும் ஏ,பி என்று பெயரிடப்பட்ட இரண்டு அறைகள் மட்டும் திறக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து பாதாள அறைகளைத் திறந்து பொக்கிஷங்களை மதிப்பிடுவது ஆண்டவனுக்கு பிடித்திருக்கிறதா? என்று அறிய தேவ பிரசன்னம் என்ற ஜோதிட நிகழ்ச்சியும் நடத்திப் பார்த்தனர்.
இந்நிலையில் வழக்குத் தொடர்ந்த சுந்தரராஜன் மறைந்து போக கோயில் பாதாள அறைகளைத் திறந்ததால்தான் இந்த நிலைமை என்றும் 2 அறைகளை திறந்தால் பெரும் அழிவு ஏற்படும் என்றெல்லாம் வதந்தியும் கிளப்பி விடப்பட்டது.
இந்நிலையில் கடந்த 9-ந் தேதியன்று உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான எம்.வி. நாயர், திருவனந்தபுரம் கோயில் பாதாள அறைகளில் உள்ள ஆபரணங்களை மதிப்பிடும் பணி இன்று தொடங்கும் என அறிவித்திருந்தார்.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன












Click it and Unblock the Notifications