திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி தொடக்கம்
திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோயிலின் பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி இன்று காலை தொடங்கியுள்ளது.
உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட எம்.வி. நாயர் தலைமையிலான குழு, எம்.என். கிருஷ்ணன் தலைமையிலான குழு முன்னிலையில் பொக்கிஷங்களை மதிப்பிட்டு ஆவணப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கேரள அரசு பிரதிநிதிகள், திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரும் இக்குழுக்களில் இடம்பெறுள்ளனர்.
திருவனந்தபுரம் கோயில் உள்ள பாதாள அறைகளில் லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொக்கிஷங்கள் இருப்பதாக தெரியவந்தது.
பணக்கார சாமி என்றழைக்கப்பட்ட திருப்பதியை பின்னுக்கு தள்ளி உலகிலேயே பணக்கார சாமி என்ற அதிரடிப் பெருமை திருவனந்தபுரம் கோயிலுக்குக் கிடைத்தது.
பின்னணி
திருவனந்தபுரம் கோயில் பொக்கிஷங்களை வெளிப்படுத்த வேண்டும் என்ரு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சுந்தரராஜன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஜூலையில் பாதாள அறைகளைத் திறக்க குழு அமைத்தது. இதையடுத்து நவீன கருவிகளின் உதவியுடன் திருவனந்தபுரம் கோயிலின் பாதாள அறைகள் திறக்கப்பட்டு அவை வீடியோ படமாக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இருப்பினும் ஏ,பி என்று பெயரிடப்பட்ட இரண்டு அறைகள் மட்டும் திறக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து பாதாள அறைகளைத் திறந்து பொக்கிஷங்களை மதிப்பிடுவது ஆண்டவனுக்கு பிடித்திருக்கிறதா? என்று அறிய தேவ பிரசன்னம் என்ற ஜோதிட நிகழ்ச்சியும் நடத்திப் பார்த்தனர்.
இந்நிலையில் வழக்குத் தொடர்ந்த சுந்தரராஜன் மறைந்து போக கோயில் பாதாள அறைகளைத் திறந்ததால்தான் இந்த நிலைமை என்றும் 2 அறைகளை திறந்தால் பெரும் அழிவு ஏற்படும் என்றெல்லாம் வதந்தியும் கிளப்பி விடப்பட்டது.
இந்நிலையில் கடந்த 9-ந் தேதியன்று உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான எம்.வி. நாயர், திருவனந்தபுரம் கோயில் பாதாள அறைகளில் உள்ள ஆபரணங்களை மதிப்பிடும் பணி இன்று தொடங்கும் என அறிவித்திருந்தார்.
-
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு












Click it and Unblock the Notifications