பத்மநாபசுவாமி கோவிலின் சி, டி அறைகளைத் திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் ரகசிய அறைகளில் சி, டி ஆகிய அறைகளைத் திறந்து அதில் உள்ள பொக்கிஷங்ளை மதிப்பிட வேலாயுதன் நாயர் தலைமையிலான குழுவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திருவனந்தபுரம் பதம்நாப சுவாமி கோவிலின் ரகசிய அறைகளில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி கடந்த 20ம் தேதி முதல் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது இ மற்றும் எஃப் ஆகிய அறைகளில் உள்ள பொக்கிஷங்கள் மதிப்பிடப்படுகின்றன. இந்நிலையில் சி மற்றும் டி அறைகளைத் திறக்கக் கூடாது என்று கூறி திருவனந்தபுரம் முதன்மை சப்-கோர்ட் அந்த அறைகளுக்கு சீல் வைத்தது. இதையடுத்து அந்த 2 அறைகளைத் திறக்க அனுமதி கோரி மதிப்பீட்டு குழு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சி மற்றும் டி அறைகளைத் திறந்து அதில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பிட வேலாயுதன் நாயர் தலைமையிலான குழுவுக்கு அனுமதி அளித்தது. மேலும் இனி பத்மநாப சுவாமி கோவில் விவகாரத்தில் தலையிடக் கூடாது என்று சப்-கோர்ட்டுக்கு உத்தரவிட்டுள்ளது. மதிப்பீட்டுக் குழு அனுமதியுடன் சி மற்றும் டி அறைகளில் உள்ள பாத்திரங்களை பூஜைகளுக்குப் பயன்படுத்தலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இ மற்றும் எஃப் அறைகளில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி முடியாததால் சி மற்றும் டி அறைகளை என்று திறக்கலாம் என்பது குறித்து மதிப்பீட்டுக் குழு இன்று கூடி முடிவு செய்கிறது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications