5 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி: ராகுல்காந்தி ராசி இல்லாதவர்- இல.கணேசன் !
சங்கரன்கோவில்: 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளின் மூலம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி ராசி இல்லாதவர் என்பது தெளிவாகி உள்ளது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சங்கரன்கோவிலில் அவர் கூறியதாவது,
காங்கிரஸ் கட்சிக்கு பாடம் கற்பிக்க சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வாக்காளர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. தேமுதிகவிற்கு நல்ல எதிர்காலம் இல்லை. தமிழக மக்களை விட வெளியில் உள்ள மக்களை குறித்து தான் வைகோவுக்கு அதிக கவலை.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகளின் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்பது தெரிவாகின்றது. இதன் மூலம் ராகுல் காந்தி ராசி இல்லாதவர் என்பது தெளிவாகி உள்ளது.
கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்து ஜெயலலிதா பேசாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. கூடங்குளம் பிரச்சனையில் வெளிநாட்டு சதி இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். ஆனால் அதை ஏன் அவர் தடுக்கவில்லை. பிரதமர் ஓட்டுக்காக அரசியல் செய்கிறார் என்றார்.












Click it and Unblock the Notifications