இந்தியாவுக்கு வரும் அவுட் சோர்சிங் வாய்ப்புகள் அடுத்த 8-10 ஆண்டுகளில் குறைந்துவிடும்?

Subscribe to Oneindia Tamil

Outsourcing
டெல்லி: இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கக் கூடிய அவுட் சோர்சிங் வேலை வாய்ப்புகள் 2014-ம் ஆண்டிலிருந்து குறையக் கூடும் என்று ஹாக்கெட் குரூப் எனப்படும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது

இந்நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் இந்தியாவுக்குக் கொடுத்திருக்கும் அவுட் சோர்சிங் வேலை வாய்ப்புகள் பல இந்த ஆண்டின் இறுதியில் முடிவடைய உள்ளன. அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளில் பெரும்பாலான ஆப்ஷோரிங் பணிகள் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து விடைபெறக் கூடும்.

இதனால் இந்திய நிறுவனங்கள் மாற்று வேலைவாய்ப்புகளைத் தேடுவதில் பெரும் சவால்களை எதிர்கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் 40 சதவீதமாக உள்ள அவுட் சோர்சிங்பணிகள் 2013-ம் ஆண்டில் 38 ஆகக் குறைந்ஹ்டு அதன் பின்னர் படிப்படையாகக் குறைந்துவிடும். வெளிநாட்டு வங்கிகள், ஆயுள்காப்பீட்டு நிறுவனங்கள் மூலமாக இந்திய பிபிஓ துறைக்கு 14 பில்லியன் டாலர் முதல் 100 பில்லியன் டாலர் வரையில் வருமானம் கிடைத்து வருகிறது.

2016-ம் ஆண்டில் அவுட் சோர்சிங் பணிகள் மிகவும் கணிசமாகக் குறைந்துவிடக் கூடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இதை நிராகரிக்கும் இந்திய நிறுவனங்கள், தற்போது உலகளவில் ஆப்ஷோரிங் துறையில் இந்தியாவின் பங்களிப்பு 6 விழுக்காடாக இருக்கிறது. நிச்சயம் 2014ம் ஆண்டில் 12 விழுக்காடாக அதிகரிக்கும் என்று வாதிடுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+