சமைத்துப் போட்டவர் சம்பளம் கேட்டதால் அடித்து உதைத்த வட மாநில மாணவர்கள்!
சென்னை: சமையல் செய்து கொடுத்தவர் அதற்கான பணத்தைக் கேட்டதற்காக அவரை அடித்து உதைத்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக 2 பீகார் மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 6 மாணவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
சமீபத்தில்தான் சென்னை வேளச்சேரியில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட வட மாநிலக் கொள்ளையர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் சில வட மாநில மாணவர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ஒருவரை அடித்து உதைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலவாக்கத்தைச் சேர்ந்தவர் சுஜீத். இவர் நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் வாடகை வீடுகளில் தங்கிப் படித்து வரும் வட மாநில மாணவர்களுக்கு சமையல் செய்து கொடுத்து வருகிறார். இதற்காக கட்டணம் வாங்குவார்.
ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கி சத்யபாமா பொறியியல் கல்லூரியில் படித்து வரும் 8 மாணவர்களுக்கும் சுஜீத்தான் சமையல் செய்து வந்தார். ஆனால் அதற்குரிய கட்டணத்தை அவர்கள் செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர். இதையடுத்து தனது சகோதரர் ரஞ்சித்திடம் இதுகுறித்துக் கூறினார் சுஜீத்.
இதையடுத்து ரஞ்சித், அந்த மாணவர்களிடம் போய் ஏன் பணம் கொடுக்காமல் இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள், ரஞ்சித்தை சரமாரியாக அடித்து உதைத்து ஒரு அறையில் போட்டனர். பின்னர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.
படுகாயமடைந்த ரஞ்சித்தை ஒரு பைக்கில் ஏற்றி சாலையோரமாக போட்டு விட்டுப் போய் விட்டனர். தட்டுத் தடுமாறி எழுந்த ரஞ்சித், தனது வீட்டுக்குப் போனார். அவர்வந்த கோலத்தைப் பார்த்துப் பதறிப் போன அந்த வீட்டின் உரிமையாளர், என்ன என்று கேட்டுள்ளார். நடந்ததைக் கூறினார் ரஞ்சித். இதையடுத்து ரஞ்சித்தை அழைத்துக் கொண்டு நீலாங்கரை காவல் நிலையத்திற்குப் போனார் வீட்டு உரிமையாளர். அங்கு ரஞ்சித் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு விரைந்தனர். அங்கிருந்த எட்டு மாணவர்களையும் காவல் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு நடந்த விசாரணைக்குப் பின்னர் பாண்டே மற்றும் ஆனந்த் ஆகிய இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த துப்பாக்கிகள் பீகாரிலிருந்து கள்ளச் சந்தையில் பெறப்பட்டதாகும். சம்பந்தப்பட்ட மாணவர்களும் பீகாரைச் சேர்ந்தவர்கள ஆவர்.
இந்த மாணவர்கள் துப்பாக்கி வைத்திருந்தது ஏன் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருவதாக இணை ஆணையர் சண்முகராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications