இடிந்தகரைக்குள் போலீஸ் நுழைவதாக பரவிய தகவலால் பரபரப்பு
வள்ளியூர்: இடிந்தகரைக்குள் போலீஸ் படை நுழையப்போவதாக பரவிய தகவலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அணு உலை பணிகள் அனைத்தும் தற்போது தொடங்கப்பட்டுவிட்டதால் அணு மின் நிலையம் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்பு்ம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கூடங்குளம் மற்றும் இடிந்தகரையில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் கூடங்குளம் அணு மின் நிலைய பகுதிக்குள் அத்துமீறி யாரேனும் நுழைந்துவிடாமல் இருப்பதற்காக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ராதாபுரம் தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு அமுலில் உள்ளதால் இடிந்தகரை மற்றும் கூடங்குளத்தை சுற்றிலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர கூடங்குளம், இடிந்தகரை செல்லும் சாலைகளில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. போராட்டக்காரர்களை ஒடுக்க போலீசார் இவ்வாறு நடவடிக்கை எடு்த்திருக்கும் வேளையில், போலீசார் ஊருக்குள் நுழையாமல் இருக்க போராட்டக்காரர்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
அவர்கள் இடிந்தகரை கிராமத்திற்கு வரும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இருந்தபோதிலும் போலீசார் எந்த நேரத்திலும் இடிந்தகரை கிராமத்திற்குள் நுழையலாம் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது. ஆகையால் போலீசார் ஊருக்குள் நுழைகிறார்களா என்பதை போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் போலீசார் ஊருக்குள் வரப்போவதாக இடிந்தகரையில் இன்று காலை தகவல் பரவியது. இதையடுத்து இடிந்தகரை பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் மணி அடிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் ஊர் மக்கள் திரண்டனர். மேலும் இடிந்தகரையில் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஏராளமானோர் அங்கு வந்தார்கள்.
அவர்கள் அனைவரும் இடிந்தகரை கிராமத்தைச் சுற்றிலும் அரண்போல் நின்று கொண்டு கண்காணித்தனர். ஆனால் வெகு நேரமாக போலீசார் யாரும் ஊருக்குள் வரவில்லை. இதனைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு உண்ணாவிரதம் நடந்த இடத்திற்கு சென்றனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications